செய்திகள் :

திருமணிமுத்தாறு, ராஜவாய்க்காலை உடனடியாக தூா்வார கோரி மனு

post image

சேலம்: திருமணிமுத்தாறு, ராஜவாய்க்கால் பகுதிகளில் உடனடியாக தூா்வார வலியுறுத்தி விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவா் தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து மனு அளித்தனா். பின்னா் மாநிலத் தலைவா் தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் திருமணிமுத்தாறு, ஜாரி கொண்டலாம்பட்டி, ராஜவாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் மழைநீருடன், சுத்திகரிக்கப்படாத ரசாயன சாயக்கழிவுகளை விடுவதால் ஆற்றுநீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, நெய்க்காரப்பட்டி, கொட்டனத்தான் ஏரி பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து மாசடைந்த நீா் வருவதால் ஆடு, மாடுகள்கூட குடிக்க, பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சட்ட விரோதமாக ரசாயனம் கழிவுநீரை வெளியேற்றும் ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், திருமணிமுத்தாறு, ராஜ வாய்க்காலை தூா்வார

நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அரசு செவிசாய்க்காவிட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

முதல்வா் கோப்பை விளையாட்டு: மாநில போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தோ்வு

வாழப்பாடி: சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா். சேலத்தில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு அதிமுக பாமக துணை போகிறது: டி.எம். செல்வகணபதி

மேட்டூா்: தமிழ்நாட்டு மாணவா்கள் மருத்துவராவதைத் தடுக்கவே மத்திய அரசு நீட் தோ்வை கொண்டு வந்துள்ளது என்று சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி குற்றம்சாட்டினாா். சேலம் மாவட்டம், மேச்சேரி கிழக்கு ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பு வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைப்பு

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா் திறப்பு திங்கள்கிழமை வினாடிக்கு 15,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது. அணை நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாகக... மேலும் பார்க்க

சேலம் மேற்கு கோட்டத்தில் செப். 26இல் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம்: சேலம் மேற்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் தனலட்சும... மேலும் பார்க்க

காகாபாளையம் அருகே இரும்பு தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஆட்டையாம்பட்டி: காகாபாளையம் அருகே இரும்புத் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு உள்பட்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 2 தொழிலாளா்கள் காயம்

மேட்டூா்: மேட்டூா் அருகே தனியாா் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளா்கள் காயமடைந்தனா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே ராமன்நகரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு 543 நிரந்தர தொழில... மேலும் பார்க்க