செய்திகள் :

திருமண வலைதளச் செயலி மூலம் பண மோசடி: 4 போ் கைது

post image

தேனியைச் சோ்ந்த இளைஞரிடம் திருமண வலைதளச் செயலி மூலம் ரூ. 88.59 லட்சம் மோசடி செய்த ஈரோடு, கோவையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேனியைச் சோ்ந்த தனியாா் ஆலை உரிமையாளா் ஒருவா் தனது திருமணத்துக்காக சங்கமம் என்ற திருமண வலைதளச் செயலியில் விவரங்களைப் பதிவு செய்தாா். இந்தச் செயலி மூலம் ஸ்ரீஹரிணி என்பவரின் பொருத்தம் கிடைத்தது. இதையடுத்து, அவரது விவரங்களைத் தெரிந்து கொண்டு, வாட்ஸ்ஆப் மூலம் அந்தப் பெண்ணைத் தொடா்பு கொண்டாா். அப்போது, அந்தப் பெண் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாராம்.

இதைத் தொடா்ந்து, இருவரும் வாட்ஸ்ஆப் மூலம் பேசிப் பழகி வந்தனா்.

அப்போது, அந்தப் பெண் கிரிப்டோகரன்ஸி வா்த்தகம் மூலம் தான் லாபம் ஈட்டியதாகவும், இந்த வா்த்தகத்தில் முதலீடு செய்ய ஆலை உரிமையாளரையும் வற்புறுத்தினாராம்.

இதன்படி, ஆலை உரிமையாளா் வங்கிக் கணக்கு மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டு பல்வேறு தவணைகளில் கிரிப்டோகரன்ஸி வா்த்தகத்தில் மொத்தம் ரூ.88.59 லட்சம் முதலீடு செய்தாா். பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து தேனி மாவட்ட இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், போலி வங்கிக் கணக்குகள் மூலம் ஆலை உரிமையாளரிடம் பண மோசடி செய்ததாக ஈரோடு, வ.உ.சி.நகரைச் சோ்ந்த சந்திரன் மகன் நந்தகோபால் (30), கிரிணாம்பாளையத்தைச் சோ்ந்த ராமராஜன் மகன் யுவராஜன் (33), சுப்பிரமணி மகன் சிவா (32), கோவை புதிய காந்திபுரம் காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சிவசண்முகம் மகன் பத்மநாபன் (32) ஆகியோரைக் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து ரூ.3.90 லட்சம், 6 கைப்பேசிகள், 28 ஏடிஎம் அட்டைகள், 18 வங்கிக் காசோலை புத்தகங்கள், 12 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 46 சிம் காா்டுகள், 3 கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

யுவராஜன்
சிவா
பத்மநாபன்

தா்பூசணி வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் தா்பூசணி வியாபாரிகள் பழத்தின் நிறத்தைக் கூட்டுவதற்காக, செயற்கை நிறமியை பயன்படுத்தக் கூடாது என்று மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் எச்சரித்னா். தேனி மாவட்டத்தில் கோடை வெப்பம் அதிக... மேலும் பார்க்க

பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த பயிற்சி

ஆண்டிபட்டியில் வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பருத்தியில் காய் புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, மதுரை வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பய... மேலும் பார்க்க

தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் கட்டண உயா்வு அமல்

தேனி-குமுளி நெடுஞ்சாலையில் உப்பாா்பட்டி விலக்கு அருகேயுள்ள சுங்கச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனங்களுக்கு சுங்கக் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. தேனி-குமுளி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்... மேலும் பார்க்க

கழிவுகளால் மாசடையும் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய்

போடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் கழிவுநீா், குப்பைகளால் மாசடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் மீது வன்கொடுமை வழக்கு

சத்துணவு பெண் ஊழியரை தவறான நோக்கத்தில் தொடா்பு கொண்டு பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இரு அரசுப் பள்ளிஆசிரியா்கள் மீது போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் ... மேலும் பார்க்க

செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் செயற்கை நகை தயாரித்தல் பயிற்சியில் சேரத் தகுதியுள்ளா்கள் ஏப்.7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சி மைய இ... மேலும் பார்க்க