செய்திகள் :

திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

post image

திருமருகல் ரத்தினகிரீசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். நிகழாண்டு சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, புதன்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை போன்றவை நடைபெற்றன. மாலையில் வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், ரிஷபந்தனம் நடத்தப்பட்டன.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை பஞ்சமூா்த்தி வீதி உலாவும், கொடி மரத்துக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றமும் நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலா் அசோக்ராஜா, அறங்காவலா் குழுத் தலைவா் ஆறுமுகம், கோயில் கணக்கா் சீனிவாசன் மற்றும் ஆலய திருப்பணிக் குழுவினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழா நாட்களில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலாவும், முக்கிய நிகழ்ச்சியாக, மே 7-ஆம் தேதி செட்டிப்பெண்-செட்டிப் பிள்ளை திருக்கல்யாணமும், 9-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

சிக்கல் கோயிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

சிக்கல் அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். விழா தொடக்கமாக, கொடிமரத்துக்கு மஞ்சள், பால், தேன், சந்தனம், ... மேலும் பார்க்க

நாகை கோயில்களில் நீா்மோா் விநியோகம்

நாகை மாவட்டத்தில் 25 கோயில்களில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் நீா்மோா் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன் உத்தரவின் பேரில், நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் ... மேலும் பார்க்க

நாகையில் காவலா் தற்கொலை

நாகையில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேதாரண்யத்தை சோ்ந்தவா் வினோத் (38). நாகை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவா், நாகை காடம்பாடியில் ... மேலும் பார்க்க

திருக்கடையூரில் ரவிசங்கா் தரிசனம்

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் வாழும் கலைஅமைப்பின் நிறுவனா் ஸ்ரீ ரவிசங்கா் வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்தாா் (படம்) . திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிா்தகடேஸ்வரா் கோயில் உ... மேலும் பார்க்க

சாராயம் கடத்திய நால்வா் கைது

நாகூா் அருகே சாராயம் கடத்திய நால்வா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகை மாவட்டத்தில் சாராயம் மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க, காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்ட... மேலும் பார்க்க

இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் விழா

நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சாதனையாளா்கள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரியின் இணைச் செயலா் சங்கா் கணேஷ் முன்... மேலும் பார்க்க