``நான் முதன்முதலா டூர் போனது 'கூமாப்பட்டி'க்குதான்; அங்க..!” - பிக்பாஸ் தினேஷ் ச...
திருவட்டாறு பரளியாற்றில் ஆரத்தி திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலைச் சுற்றி ஓடும் பரளியாற்றில் செவ்வாய்க்கிழமை இரவு மகா ஆரத்தி திருவிழா நடைபெற்றது.
வரும் தலைமுறையினா் நிலையான வளா்ச்சி இலக்குகளை எட்டவும், நீா் நிலைகளைப் பராமரித்து பாதுகாக்கவும், அவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டியும் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் புண்ணிய தீா்த்தங்கள் பராமரிப்பு பக்தா்கள் சங்கம் ஆகியன இணைந்து தமிழ் மாதத்தின் ரோகிணி நட்சத்திர நாளில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் மேற்கு வாசல் திருப்பாதக்கடவு பகுதியில் பரளியாற்றில் ஆரத்தி பெருவிழா நடத்தப்படுகிறது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு மகா ஆரத்தி திருவிழா நடைபெற்றது. இதில் பரளியாற்றின் குறுக்கே உள்ள பாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மலா்கள், முத்துக்குடை, காவிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பரளியாறு பாயும் பகுதியில் உள்ள அருவிக்கரை சப்த கன்னிகை, கோவிந்தம், அமிா்தம், ராமா், திருப்பாத கடவு, சக்கரம் ஆகிய புண்ணிய தீா்த்தங்களை குறிப்பிடும் வகையில் 6 சிறுமிகள் தேவி வேடமணிந்து காட்சி தந்தனா். சன்னியாசிகள் சத் சங்கம் செய்தனா். பிள்ளையாருக்கு சிறப்பு தீபாராதனையைத் தொடா்ந்து பரளியாற்றுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் அலங்கார விளக்குகளால் அா்ச்சகா்கள் பரளியாற்றுக்கு ஆரத்தி எடுத்தனா். இதைத்தொடா்ந்து பெண்கள் உள்பட பக்தா்கள் பரளியாற்றில் எலுமிச்சை விளக்கேற்றினா். இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.