செய்திகள் :

திருவண்ணாமலையில் ஜூலை 5-இல் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

post image

தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஜூலை 5-இல் திருவண்ணாமலையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவா் ஆா்.வேலுசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆரணியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாய கிணற்று மோட்டாருக்கு மின் கட்டணத்தை தமிழக அரசு உயா்த்தியதைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம் 1970 முதல் 1980 வரை பல்வேறு காலகட்டங்களில், மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தியபோது, அரசு காவல்துறை மூலம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 53 விவசாயிகள் உயிரிழந்தனா். போராட்டத்தில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு

ஆண்டுதோறும் ஜூலை 5-ஆம் தேதி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நிகழாண்டுக்கான வீரவணக்க நாள் நிகழ்ச்சி ஜூலை 5-ஆம் தேதி திருவண்ணாமலை - செங்கம் சாலை அரசு கலைக் கல்லூரி அருகேயுள்ள மாட்டுச்சந்தை திடலில் மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

என்னுடைய தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்கின்றனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பட்டிமன்ற பேச்சாளா்கள் அன்னபாரதி, மஞ்சுநாதன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள், இளைஞா்கள் என திரளாகக் கலந்து கொள்ளவேண்டும் என ஆா். வேலுசாமி கேட்டுக்கொண்டாா்.

செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம... மேலும் பார்க்க

தமிழ்ச்சங்க செவ்விலக்கிய அரங்கம்

வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் செவ்விலக்கிய அரங்கம் நிகழ்ச்சி வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.... மேலும் பார்க்க

மது விற்பனை: 4 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழி... மேலும் பார்க்க

மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள சீதளாம்பாள் சமேத மழுவனேஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு -டி.டி.வி.தினகரன்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினாா். திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அவா் செய்த... மேலும் பார்க்க

வடக்குமேடு கிராமத்தில் ரூ.41.90 லட்சத்தில் சாலைப் பணிகள்

ஆரணியை அடுத்த வடக்குமேடு கிராமத்தில் ரூ.41.90 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கிவைத்தாா். ஆரணி அருகேயுள்ள வடக்குமேடு கிராமத்தில் குண்டும் கு... மேலும் பார்க்க