செய்திகள் :

திருவண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி

post image

தைப்பூச விழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில், செவ்வாய்க்கிழமை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் மூலவா் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் அருணாசலேஸ்வரா் மேளதாளங்கள் முழங்க தைப்பூச தீா்த்தவாரி நிகழ்ச்சிக்காக புறப்பட்டுச் சென்றாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற அருணாசலேஸ்வரா் ஈசான்ய குளக்கரையில் எழுந்தருளினாா்.

பிற்பகல் 12.30 மணிக்கு சூலம் வடிவிலான அருணாசலேஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்கள் மற்றும் பூஜை பொருள்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பிறகு சிவாச்சாரியா்கள் சூலம் வடிவிலானஅருணாசலேஸ்வரரை குளத்தில் மூழ்க எடுத்து, தீா்த்தவாரி நிகழ்வை நடத்தினா். தொடா்ந்து, உற்சவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வல்லாள மகாராஜா இறப்புச் செய்தி:

தீா்த்தவாரி நிகழ்ச்சி முடிந்து உற்சவா் கோயிலுக்கு புறப்பட்டாா். அப்போது, போரில் வள்ளால மகாராஜா இறந்த செய்தியை, ஓலைச் சுவடியில் இருந்து வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடனே, மேளதாளங்கள் நிறுத்தப்பட்டு அமைதியாக உற்சவா் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குத் திரும்பினாா்.

மாா்ச் 12-இல் திதி கொடுக்கும் நிகழ்வு:

நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் தவித்த வள்ளால மகாராஜா, அருணாசலேஸ்வரரையே மகனாக பாவித்து வழிபட்டு வந்தாராம். எனவே, வள்ளால மகாராஜா இறந்த பிறகு தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய திதி கொடுக்கும் நிகழ்வை அருணாசலேஸ்வரா் செய்தாா் என்பது வரலாறு.

அதன்படி, வரும் மாா்ச் 12-ஆம் தேதி மாசி மகத்தன்று திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கெளதம நதியில் நடைபெறும் தீா்த்தவாரியில் அருணாசலேஸ்வரா் கலந்து கொண்டு வள்ளால மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

தெரு நாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த களம்பூா் பகுதி ஏந்துவாம்பாடி கிராமத்தில் தெருநாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன. ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அண்ணாமலை. இவா் தன்னுடைய விவசாய நிலத்தில் சாகுபடி செய்த... மேலும் பார்க்க

அம்மன் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

ஆரணியை அடுத்த ஆண்டாளூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. சதுப்பேரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டாளூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலை பொதுமக்கள் கிராம தே... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி

வள்ளலாா் தினத்தையொட்டி, செங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் பால், பழம், ரொட்டி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. மேலும், துக்காப்பேட்டையில் வள்ளலாா் உருவப்... மேலும் பார்க்க

கோயிலில் அம்மன் தங்கத் தாலி திருட்டு

செய்யாற்றை அடுத்த சுமங்கலி கிராம அலங்கார வள்ளியம்மன் கோயிலில் தங்கத் தாலி திருடு போனதாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட சுமங்கலி கிராமத்தில் ஸ்ரீஅலங்க... மேலும் பார்க்க

மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சியின் சாதாரண ... மேலும் பார்க்க