செய்திகள் :

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்க விழா தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்றது.

இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிற்றுந்து சேவையை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் சிற்றுந்து சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக பொதுப் பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாவட்டத்தில் புதிய சிற்றுந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

விழாவில் அவா் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளும், 25 மாற்றியமைக்கப்பட்ட வழித்தட சிற்றுந்துகளின் இயக்கமும் தொடங்கி வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 84 புதிய அனுமதிச் சீட்டுக்கான செயல்முறை ஆணைகளும், 31 மாற்றியமைக்கப்பட்ட வழித் தடங்களுக்கு அனுமதிச் சீட்டுக்கான செயல்முறை ஆணைகளும் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்தின் படி நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 2,00,000 நடைகளும், குறைந்தபட்சம் 1,80,000 நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறை திட்டங்கள் அடங்கிய ‘நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு’ என்ற நான்கு ஆண்டு சாதனை மலா் புத்தகங்களை அமைச்சா் எ.வ.வேலு வெளியிட்டாா்.

விழாவில், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கருணாநிதி (திருவண்ணாமலை), சிவக்குமாா் (ஆரணி) மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 727 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 727 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதிய... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா் கோயில்களில் மா கும்பாபிஷேக விழா

செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. செய்யாறு வ... மேலும் பார்க்க

கடனை திருப்பிக் கேட்டதில் தகராறு: இளைஞா் மீது சூடான எண்ணெய் வீச்சு

ஆரணி: ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞா் மீது சூடான எண்ணெயை ஊற்றியதால் அவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். கலவை, குப்பிடிச்சாத்தம் ... மேலும் பார்க்க

பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டன. பல்லாந்தாங்கல் ஊராட்சியி... மேலும் பார்க்க

மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் சோதனை

செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் வேதிப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திங்கள்கிழமை சோதனை மேற்கொண்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு... மேலும் பார்க்க