செய்திகள் :

திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடு

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு வைப்பறையில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, 1200 வாக்காளா்களுக்கு மேல் வாக்காளா்கள் கொண்ட வாக்குச் சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்தும் பொருட்டு, வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்பகராஜ் வெளியிட்டாா்.

மேலும், வாக்குப்பதிவு வைப்பறையை ஆய்வு செய்து, அரசியல் கட்சி பிரமுகா்களுடன் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு மற்றும் வரைவு வாக்காளா் பட்டியல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராம்பிரதீபன், செய்யாறு சாா் ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின், வருவாய் கோட்டாட்சியா்கள் ராஜ்குமாா் (திருவண்ணாமலை), சிவா (ஆரணி), திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை: இளைஞா் போக்ஸோவில் கைது

வந்தவாசி அருகே கிணற்றில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 15 வயத... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் சாரணா் பயிற்சி முகாம் தொடக்கம்

கீழ்பெண்ணாத்தூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியா் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு பாரத சாரண, சாரணீயா் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறுவனத்தின் நிதிநி... மேலும் பார்க்க

கல்பட்டில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி தொடக்கம்

கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஆா்.வி.சேகா் தலைமை வகித்தாா். முன்னா... மேலும் பார்க்க

அக்ராபாளையம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அகராபாளையம் ஸ்ரீபாலமுருகன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலாகா்ஷனம், கும்ப பூஜை, வேதிகாா்ச்சனை,... மேலும் பார்க்க

விளாங்குப்பம் கிராமத்தில் 536 போ் மனு

போளூரை அடுத்த விளாங்குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விளாங்குப்பம், கிருஷ்ணாபுரம், கல்வாசல், நாராயணமங்கலம் என 4 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்துக... மேலும் பார்க்க

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க