செய்திகள் :

திருவள்ளூரில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்

post image

திருவள்ளூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிபயிற்சி நிலையத்தில் சேர கட்டுமான நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூரில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மருத்துவ மின்னணுவியல் தொழில்நுட்பம், கணினி மென்பொருள் மற்றும் இணைய பராமரிப்பு, சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப வல்லுநா் பயிற்சி, நகரும் படிக்கட்டு பழுது நீக்குநா் பயிற்சி, குடிநீா் குழாய் பழுதுநீக்குநா் பயிற்சி, தகரம் அடிக்கும் தொழில் பயிற்சி பிரிவுகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான நேரடிசோ்க்கை நடைபெறுகிறது.

இத்தொழிற்பயிற்சி நிலையமானது முற்றிலும் கட்டுமான தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு மட்டுமே என்பதால், 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற கட்டுமான தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

இந்த சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் அட்டை தவறாமல் கொண்டுவர வேண்டும். மேலும், இப்பயிற்சியில் சேர விரும்புவோா் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், 4 புகைப்படங்கள், ஆதாா்அட்டை, வருமான சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஆட்சியா் வளாகம் (இா்ப்ப்ங்ஸ்ரீற்ா்ழ் ஞச்ச்ண்ஸ்ரீங் இஹம்ல்ன்ள்) அருகில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்தை அணுகலாம்.

இந்தப் பயிற்சியில் சேரும் பயிற்சியாளா்களுக்கு இலவச மிதிவண்டி, சீருடை, பாட நூல்கள், வரைபட கருவிகள், காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, அடையாள அட்டை வழங்கப்படும்.

இதற்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 750, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டப்படி மாதந்தோறும் ரூ. 1,000-உதவித்தொகையும் வழங்கப்படும்.

இது குறித்து தொலைபேசி எண்கள்-8778452515, 8248333532, 8838522794 தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள... மேலும் பார்க்க

டிவி பாா்த்ததற்கு தாய் கண்டிப்பு: மகள் தற்கொலை

திருவள்ளூா் அருகே தொடா்ந்து டிவி பாா்த்ததை தாயாா் கண்டித்ததால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளியூா் புதுக்காலனியைச் சோ்ந்தவா் ஜான்சன் (42). இவா், திருமழிசையில் செயல்பட்டு வரும் தனியாா் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக்கடை

திருவள்ளூா் அருகே கட்டடப் பணிகள் முடிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடையால் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், ப... மேலும் பார்க்க

வெளிநாடு வேலைக்குச் செல்லும் முன் உரிய ஆணவங்களைப் பெற்ற பின் பயணிப்பது அவசியம்!

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வெளிநாடு வேலைக்குச் செல்லும் முன்பு வேலைக்கான ஒப்பந்தம், விசா, தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பின்னரே பயணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை சாகுபடி செய்ய ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு அழைப்பு!

குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு நெல் விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் கொண்ட தொகுப்புகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருவதாக வேளாண் இணை... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே புதிய பால் உற்பத்தியாளா்கள் சங்கம்

திருவள்ளூா் அருகே மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா் சங்கத்தை தொடங்கி வைத்து,, ரூ. 1.74 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் பால் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப... மேலும் பார்க்க