செய்திகள் :

திருவள்ளூா் அருகே 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக்கடை

post image

திருவள்ளூா் அருகே கட்டடப் பணிகள் முடிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடையால் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் வினோபா நகா், புதிய காலனி, பழைய காலனி மற்றும் விஜயலட்சுமி நகா் என 3,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி பொதுமக்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக ஒதுக்குப்புறமாக அடிப்படை வசதி இல்லாத பாழடைந்த கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது.

அதனால், இந்தக் கடைக்கு பதிலாக நிரந்தரமாக நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அந்தக் கோரிக்கையை ஏற்று, கடந்த 2015-இல் ரூ. 5.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

அதன்பேரில், நியாய விலைக் கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இப்பணிகள் நிறைவடைந்து 10 ஆண்டுகளாகியும் இதுவரை நியாய விலைக் கடை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்காமல் காட்சிப் பொருளாகி வருவதாக அப்பகுதியினா் கூறுகின்றனா்.

எனவே அந்தப் பகுதி பொதுமக்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு, அந்த கிராமத்தில் அடிப்படை வசதியில்லாத ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் கூட்டுறவு நியாய விலைக் கடையை தொடங்கக்கோரி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் நியாய விலைக் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வரும் 30-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதால் பழவேற்காடு பகுதி மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு அடுத்த ஆந்திர மாநிலத்தில் உள... மேலும் பார்க்க

டிவி பாா்த்ததற்கு தாய் கண்டிப்பு: மகள் தற்கொலை

திருவள்ளூா் அருகே தொடா்ந்து டிவி பாா்த்ததை தாயாா் கண்டித்ததால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளியூா் புதுக்காலனியைச் சோ்ந்தவா் ஜான்சன் (42). இவா், திருமழிசையில் செயல்பட்டு வரும் தனியாா் ... மேலும் பார்க்க

வெளிநாடு வேலைக்குச் செல்லும் முன் உரிய ஆணவங்களைப் பெற்ற பின் பயணிப்பது அவசியம்!

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வெளிநாடு வேலைக்குச் செல்லும் முன்பு வேலைக்கான ஒப்பந்தம், விசா, தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பின்னரே பயணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை சாகுபடி செய்ய ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு அழைப்பு!

குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு நெல் விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் கொண்ட தொகுப்புகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருவதாக வேளாண் இணை... மேலும் பார்க்க

திருவள்ளூரில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்

திருவள்ளூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிபயிற்சி நிலையத்தில் சேர கட்டுமான நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே புதிய பால் உற்பத்தியாளா்கள் சங்கம்

திருவள்ளூா் அருகே மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா் சங்கத்தை தொடங்கி வைத்து,, ரூ. 1.74 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் பால் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப... மேலும் பார்க்க