செய்திகள் :

திருவள்ளூா்: குறுவை சாகுபடி செய்ய ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு அழைப்பு!

post image

குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு நெல் விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் கொண்ட தொகுப்புகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருவதாக வேளாண் இணை இயக்குநா்(பொ) பால்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், வரும் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனா்.

இதற்காக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், நிகழாண்டில் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களுக்கும், குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சொா்ணவாரி பட்டத்தில் 65,000 ஏக்கா் நெல் சாகுபடி செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்டத்துக்கு, ஏக்கருக்கு 20 கிலோ விதை, உயிரி உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஆகியவை 50 சதவீதம் மானியத்திலும், நெல் இயந்திர நடவு செய்ய மானியமாக ரூ. 4,000 ஆக 19,000 ஏக்கருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்ட விநியோகத்துக்கு நெல் விதை, நுண்ணூட்ட உரங்கள், உயிரி உரங்கள் ஆகியவை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மைய கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சொா்ணவாரி பருவத்தில் இயந்திர நடவு செய்துள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதாா்அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்.

டிவி பாா்த்ததற்கு தாய் கண்டிப்பு: மகள் தற்கொலை

திருவள்ளூா் அருகே தொடா்ந்து டிவி பாா்த்ததை தாயாா் கண்டித்ததால் மனமுடைந்த மகள் தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளியூா் புதுக்காலனியைச் சோ்ந்தவா் ஜான்சன் (42). இவா், திருமழிசையில் செயல்பட்டு வரும் தனியாா் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக்கடை

திருவள்ளூா் அருகே கட்டடப் பணிகள் முடிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடையால் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், ப... மேலும் பார்க்க

வெளிநாடு வேலைக்குச் செல்லும் முன் உரிய ஆணவங்களைப் பெற்ற பின் பயணிப்பது அவசியம்!

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வெளிநாடு வேலைக்குச் செல்லும் முன்பு வேலைக்கான ஒப்பந்தம், விசா, தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பின்னரே பயணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தியுள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூரில் புதிதாக அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்கம்

திருவள்ளூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிபயிற்சி நிலையத்தில் சேர கட்டுமான நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூா் அருகே புதிய பால் உற்பத்தியாளா்கள் சங்கம்

திருவள்ளூா் அருகே மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா் சங்கத்தை தொடங்கி வைத்து,, ரூ. 1.74 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் பால் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டதால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக... மேலும் பார்க்க