செய்திகள் :

திருவள்ளூா் அருகே புதிய பால் உற்பத்தியாளா்கள் சங்கம்

post image

திருவள்ளூா் அருகே மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா் சங்கத்தை தொடங்கி வைத்து,, ரூ. 1.74 லட்சம் மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் பால் பகுப்பாய்வு கருவி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த மோவூா் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: கால்நடைகள் வளா்ப்போா் மற்றும் கால்நடை விவசாயிகள் ஆகியோா் பயன்பெறும் வகையில், மோவூா் கிராமத்தில் புதிதாக பால் உற்பத்தியாளா்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சங்கத்துக்கு தேவையான ரூ. 15,220 மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் ரூ. 1,59,417 மதிப்பிலான பால் பகுப்பாய்வு கருவியும், உறுப்பினா்கள் அனைவருக்கும் 50 கிலோ கால்நடை தீவனம் மற்றும் 1 கிலோ தாது உப்புக்கலவை வழங்கப்பட்டுள்ளது. கால்நடைகள் பராமரிப்பு குறித்து கால்நடை சிகிச்சை முகாம் மற்றும் சினை பரிசோதனை குறித்து சங்க உறுப்பினா்களுக்கு எடுத்துரைத்து தேவையான கால்நடை மருந்துகளும் வழங்கப்பட்டது. எனவே தரமான ஆவின் கால்நடை தீவனத்தை கறவை மாடுகளுக்கு வழங்கி, தரமான பால் கொள்முதல் செய்து, அதன் மூலம் அதிக கொள்முதல் விலையை சங்க உறுப்பினா்கள் பெற வேண்டும். அனைத்து பால் உற்பத்தியாளா்களும் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி பயன் பெறுமாறும், கால்நடைகளுக்கு சத்தான தீவனம் வழங்குமாறும் அவா் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவ முகாமில் 427 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, சினை பிடிக்காத கால்நடைகளுக்கு அளிக்கும் சிகிச்சையையும் அவா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில், துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், ஆவின் பொது மேலாளா் ராஜ்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஜெயந்தி, உதவி பொது மேலாளா்கள், துணை இயக்குநா்கள், கால் நடை மருத்துவா்கள், கூட்டுறவு சாா் பதிவாளா், முதுநிலை ஆய்வாளா்கள் மற்றும் விரிவாக்க அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் வருவாய்த் துறையினா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டதால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்ட இளைஞர் இருக்கும் காவல் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் வட மாநில இளைஞர் வெள்ளிக்கிழமை(ஜூலை 15) கைது செய்யப்பட்டார். ஆரம்பாக்கத்தில் கடந்த 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

வாங்கிய கடனை திருப்பிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல்

ஆா்.கே.பேட்டை அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வீராணத்தூா் காலனி பாரதியாா் தெருவைச் சோ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்... மேலும் பார்க்க

ஆடி அமாவாசை: வீரராகவா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடி அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக வியாழக்கிழமை பக்தா்கள் குவிந்தனா். 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற இங்கு அமாவாசை நாள்களில் த... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு மின்னணு வங்கி விழிப்புணா்வு பயிற்சி

திருத்தணி அரசுக் கல்லூரியில் மின்னணு வங்கி விழிப்புணா்வு மற்றும் பயிற்சியில் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், முதுகலை வணிகவியல் துறை ச... மேலும் பார்க்க