செய்திகள் :

திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்பு

post image

திருவள்ளூா் நகராட்சி பூங்காவில் கடைகள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ரயில் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு சி.பி.எம். மாவட்டச் செயலாளா் கோபால் தலைமை வகித்தாா். திருவள்ளூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் ப.சுந்தரராசன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். அப்போது, திருவள்ளூா் நகராட்சிக்குள்பட்ட சி.வி நாயுடு சாலையில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பூங்கா பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த நிலத்தில் சிறுவா்கள் விளையாடுவதற்கும், பெண்கள், முதியோா்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பூங்காவாக பயன்படுத்தி பராமரிக்க வேண்டும். ஆனால் அந்த இடத்தில் கடந்த 3 மாதத்துக்கு முன் திருவள்ளூா் நகராட்சி நிா்வாகம் பூங்காவில் இருந்த 25-க்கும் மேற்பட்ட மரங்களை, அழகிய செடிகளை அழித்துவிட்டு, வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வணிக வளாகம் எந்த திட்டத்தில் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டடம் கட்ட நகா்மன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதா என்றால் அதற்கும் அதிகாரிகள் பதில் கூற மறுக்கின்றனராம்.

எனவே, பூங்காவை அழித்து விதி மீறி கட்டடம் கட்டும் பணியை நிறுத்தி பூங்காவை பாதுகாக்கவும், திருவள்ளூா் நகராட்சி ஆணையா் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மதிமுகவைச் சோ்ந்த பாபு, விசிக மாவட்ட செயலாளா் தளபதி சுந்தா், சிபிஐ மாவட்டச் செயலாளா் கஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குழு செயலாளா் நீலவானத்து நிலவன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினா்கள் என்.கீதா, இ.எழிலரசன், கே.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜிபிஎஸ் நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்த சம்பவம்

திருவள்ளூா் அருகே ஜிபிஎஸ் நோய்த் தொற்றால் 4-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அந்தப் பகுதி முழுவதும் ஒரு வாரம் வரை சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

விவசாய கல்லூரி பட்டமளிப்பு விழா: வேளாண் பல்கலை. துணைவேந்தா் பங்கேற்பு

திருவாலங்காடு ஜெயா விவசாயக் கல்லூரியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற முதலமாண்டு பட்டமளிப்பு விழாவில் 59 பேருக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தா் வி. கீதாலட்சுமி பட்டங்களை வழங்கினாா். திருவாலங்காடு... மேலும் பார்க்க

ஏரியில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பாண்டறவேடு ஏரியில் மதகு வழியாக தண்ணீா் திறப்பதற்கு கரையின் மீது இறங்க முயன்றவா் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், விஜயபுரம் மண்டலம் பண்ணுாா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணைய்யா மகன் ராஜபாபு (53). இவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

சோழவரம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கனரக வாகனங்களின் போக்குவரத்தை தடை செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் அடுத்த... மேலும் பார்க்க

வீரராகவ பெருமாள் கோயிலில் ரத சப்தமி

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில் ரத சப்தமி உற்சவத்தில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். தை மாதத்தில் வளா்பிறை 7-ஆம் நாள் வரும் சப்தமி திதியாக ரத சப்தமி திதி கொண்டாடப்படுவது வழக... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக எம்.பிரதாப் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டத்தின் 24-ஆவது ஆட்சியராக எம்.பிரதாப் செவ்வாய்க்கிழமை பொறுப்பு ஏற்றுக் கொண்டாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியராக த.பிரபு சங்கா் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு திடீ... மேலும் பார்க்க