செய்திகள் :

திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனித்தோ்வா்கள் என மாணவா்கள்-16,932, மாணவிகள்-16,392 மற்றும் மூன்றாம் பாலினத்தவா்-1 உள்பட மொத்தம்-33,325 போ் விண்ணப்பித்தனா். இத்தோ்வுக்காக திருவள்ளூா் மற்றும் பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டங்களில் மட்டும் 144 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 32,923 போ் தோ்வு எழுதினா். 402 போ் தோ்வு எழுதவில்லை.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தோ்வு மையங்களுக்கு முன்கூட்டியே மாணவ, மாணவிகள் வருகை தந்தனா். முன்னதாக அங்குள்ள கோயில் வளாகத்தில் மாணவ, மாணவிகள் வழிபாடு செய்துவிட்டு சென்றனா்.

இந்த நிலையில் திருவள்ளூா் சிஎஸ்ஐ கெளடி மேல் நிலைப்பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் நடைபெறும் வளா்ச்சிப்பணிகள் நிலை குறித்து ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதன் ஒருபகுதியாக புட்லூா் ஊராட்சியில் ரூ.19.70 லட்சத்தில் கட்டப... மேலும் பார்க்க

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் நடராஜ பெருமானின... மேலும் பார்க்க

குட்கா விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்

குட்கா பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில், காவல் துறையுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைத்து கூட்டாய்வு மேற்கொள்வது அவசியம் என திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா். த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 4.... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் வீதி உலா

திருத்தணி அருகே வேலஞ்சேரி கிராமத்தில் திரெளபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருத்தணி காந்தி நகா் திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 27 -ஆம் தேதி தீமிதித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிற... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட அரசு விடுதிகளில் நூலகம் அமைக்க நடவடிக்கை

திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் நூலகம் அமைத்தல், உணவருந்தும் வகையில் மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும... மேலும் பார்க்க