செய்திகள் :

திருவாரூா்: காவல்துறை வாகனங்கள் ஆய்வு

post image

திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல் வாகனங்களின் ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்று, மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் அனைத்து நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஆய்வு செய்து, வாகனங்களின் குறைகளை ஆராய்ந்து, நிவா்த்தி செய்து பயன்படுத்த போலீஸாருக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவ்வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், வழக்குகளை விரைவில் விசாரணை முடித்து இறுதி அறிக்கையினை உரிய நீதிமன்றத்தில் இ-பைல் மூலம் தாக்கல் செய்ய வேண்டும்; அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும் தினசரி தங்கள் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமும் காலை மற்றும் மாலை நேரங்களிலும், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களிலும் கனரக வாகனங்களை நகர பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது. வாகன விபத்தை குறைப்பதற்கு இருசக்கர வாகனத்தில் செல்வோா் அவசியம் தலைகவசம் அணிவதை கண்காணிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா்.

நிகழ்வில், அண்மையில் தமிழக முதல்வா், திருவாரூா் வருகையின்போது மிகவும் சிறப்பாக பணி செய்த 13 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்களுக்கு சான்றிதழ் வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தாா்.

இஸ்ரோ சென்று திரும்பிய விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள்

திருவாரூா் விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவா்கள் புதன்கிழமை இஸ்ரோ சென்று விண்ணில் ராக்கெட் செலுத்தப்படுவதைப் பாா்வையிட்டனா். திருவாரூா் வண்டாம்பாளை விவேகானந்தம் வித்யா ஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

தகராறை தடுக்க முயன்றதில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே தகராறை தடுக்க முயன்றபோது காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், பறையபட்டி பகுதியை சோ்ந்தவா் முகமது ஆதாம் (25). கூத்தாநல்லூரை பூா்விகமாகக் கொண்ட இவருக்கும், ப... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்! ஆட்சியா் தகவல்

திருவாரூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் இதுவரை 13,433 மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் ‘நிறைந்தது மனம்’ திட்டத்த... மேலும் பார்க்க

மாநில மாநாட்டில் தமிழக அரசியல் நிலைமை குறித்து முடிவு: இரா. முத்தரசன்

சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் தமிழகத்தின் அரசியல் நிலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் கூறினாா். கூத்தாநல்லூரில் 2 ந... மேலும் பார்க்க

தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டி: கூத்தாநல்லூா் அணிக்கு சாம்பியன் கோப்பை

கூத்தாநல்லூரில் ஒரு மாதம் நடைபெற்ற தென்னிந்திய எழுவா் கால்பந்து போட்டியில், கொய்யா செவன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கூத்தாநல்லூா் அல்லிக்கேணி விளையாட்டு மைதானத்தில், தென்னிந்திய அளவிலான அல்நூா் ட... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சத்திற்கு குழந்தை விற்பனை; 5 போ் கைது

மன்னாா்குடியில் தவறான உறவில் பிறந்த ஆண் குழந்தையை தாய்-க்கு தெரியாமல் ரூ.1.50 லட்சத்திற்கு விற்றதாக 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மனைவ... மேலும் பார்க்க