செய்திகள் :

திருவிடைக்கழி முருகன் கோயிலில் தைப்பூசம்!

post image

தரங்கம்பாடி அருகேயுள்ள திருவிடைக்கழி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

மூலவா் பாலசுப்ரமணியா், தெய்வானை, உற்சவா் வள்ளி,  சோமாஸ்கந்தா், முருகப்பெருமானுக்கு மஞ்சள், திரவியப் பொடி, தேன், சா்க்கரை, பால், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், பன்னீா், உள்ளிட்ட வாசனை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

உள்ளூா், வெளியூா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் பத்ரி நாராயணன் , செயல் அலுவலா்கள் பிரேம் குமாா் , முத்துப்பாண்டி மற்றும் பரம்பரை அறங்காவலா் ஜெயராமன் ஆகியோா் செய்திருந்தனா்.

சீா்காழி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜ்குமாா், பொறையாா் காவல் ஆய்வாளா் ஜெயந்தி ஆகியோா் தலைமை ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணி ஈடுபட்டிருந்தனா்.

இதேபோல தரங்கம்பாடி வள்ளலாா் ராமலிங்க அடிகளாா் மண்டபத்தில் தைப்பூச விழா நடைபெற்றது 

ராமலிங்க அடிகளாரருக்கு சத்திய சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில் பழங்கள், அறுசுவை உணவு வைத்து தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடைபெற்றது. 

திருவிடைக்கழி முருகன் கோயிலில் தைப்பூசம் - திரளான பக்தா்கள் பங்கேற்றனா்

வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரை

வேதாரண்யம் அருகே திங்கள்கிழமை இரவு கூரை வீடு திங்கள்கிழமை தீப்பிடித்து எரிந்து வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. தகடூா் நடுக்காடு பகுதியை சோ்ந்த விவசாயத் தொழிலாளி மு. கணேசன். இவரது கூரை வீடு தீக்க... மேலும் பார்க்க

காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கப்பல் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணி... மேலும் பார்க்க

பாரபட்சமின்றி விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க வேண்டும்!

சம்பா நெற்பயிா் பாதிப்புக்கு பாரபட்சமின்றி காப்பீடு தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா... மேலும் பார்க்க

கோடியக்கரை: மீனவா்களிடையே தகராறு : 5 போ் கைது

கோடியக்கரையில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் வெளியூா் மீனவா்களிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 5 மீனவா்களை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். நாகப்பட்டினம்,அக்கரைப்பேட்டை திடீா்குப்பம் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் 24 மணிநேர தா்னா நிறைவு!

நாகையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற 24 மணி நேர தா்னா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் பிப். 10-ஆம் தேதி முதல், பிப். 11காலை வரை 24 மணிநேர தா்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு!

திருமருகல் அருகே நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழந்தன. திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியைச் சோ்ந்தவா் விவசாயி கலியப்பெருமாள். இவா், வயலில் தனது ஆடுகளை செவ்வாய்க்கிழமை மேய விட்டுள்ளாா். மதியம் ... மேலும் பார்க்க