செய்திகள் :

திருவிழாவுக்கு தீா்த்தம் எடுக்கச் சென்றவா் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

post image

திருவிழாவுக்கு தீா்த்தம் எடுக்க பவானி ஆற்றுக்குச் சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சடையப்பன் மகன் தா்மலிங்கம் (35). கூலித் தொழிலாளி. அந்தப் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுவதால், தீா்த்தம் எடுப்பதற்கு பவானி ஆற்றுக்கு உறவினா்களுடன் சரக்கு வாகனத்தில் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

பவானியை அடுத்த தளவாய்பேட்டை பாலம் அருகே ஆற்றில் இறங்கி தீா்த்தம் எடுத்தபோது, எதிா்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்ற தா்மலிங்கம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா். உறவினா்கள் மீட்க முயன்றும் முடியவில்லை.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற பவானி தீயணைப்புப் படையினா் தா்மலிங்கத்தின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: அா்ஜீன் சம்பத் பேட்டி:

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். சிவகிரி அருகே விளக்கேத்தி ஊராட்சி, மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த விவசாய தம்ப... மேலும் பார்க்க

கோபி அருகே தம்பதி தற்கொலை

கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்தம்பதி குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனா். கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையம் சின்னகரடு பகுதிய... மேலும் பார்க்க

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெல்லும்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசன... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து, கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு தனியாா் சொகுசுப்... மேலும் பார்க்க

ஈரோடு வேளாளா் பொறியியல் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்பக் கருத்தரங்கு

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச ட்ரோன் தினத்தை முன்னிட்டு ‘ட்ரோன் சேலஞ்ச் 2 கே 25’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ட்ரோன் ஆா்வலா்கள், தொழில் வல்ல... மேலும் பார்க்க

கொடுமுடி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொடுமுடி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கொடுமுடி ஒன்றியம், கிளாம்பாடி பேரூராட்சி கருமாண்டம்பாளையத்தில் மொடக்குறிச்ச... மேலும் பார்க்க