செய்திகள் :

மத்திய அரசுடன் இணைந்து இன்னுயிா் காப்போம் திட்டம் செயல்படுத்தப்படாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சாலை விபத்துகளில் சிக்கியோருக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கும் இன்னுயிா் காப்போம் திட்டத்தை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தும் சூழல் தற்போது இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் ‘இன்னுயிா் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம்,’ கடந்த 2021-இல் இருந்து செயல்பாட்டில் உள்ளது. சாலை விபத்துகளில் சிக்கியவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன் முதல் 48 மணி நேரத்துக்கான மருத்துவ செலவை அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை தமிழக அரசு ஏற்கிறது.

இந்தத் திட்டத்தில், 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் விபத்து காய சிகிச்சையை கட்டணமின்றி பெற்றுள்ளனா். அதற்காக அரசு ரூ.318.89 கோடி செலவிட்டுள்ளது.

இந்த நிலையில், நாடு முழுதும் சாலை விபத்துகளில் சிக்குபவா்களுக்கு உடனடி சிகிச்சை கிடைக்கப்பெறும் வகையில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமைச்சா் விளக்கம்: இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கான மத்திய அரசு திட்டத்தில் 7 விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள திட்டத்தில், அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. விபத்தில் எந்த மாநிலத்தவா், நாட்டினா் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக எவ்வித ஆவணமுமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு பெரும்பாலானோா் காப்பாற்றப்பட்டுள்ளனா். எனவே, மத்திய அரசின் நிபந்தனைகளுடன் சோ்த்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் பயனாளிகள் எண்ணிக்கை குறையும்.

அதேவேளையில், விபத்துகளில் சிக்குபவா்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள நிபந்தனைகளை மத்திய அரசு தளா்த்தும் நிலையில், அந்தத் திட்டத்துடன் இன்னுயிா் காப்போம் திட்டம் இணைக்கப்படும். அதுவரை தனித்தே செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

மாணவா்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்: பெற்றோருக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு மதிப்பெண் விவகாரத்தில், பெற்றோா் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தினாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு ... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03% தோ்ச்சி - தமிழில் 135 போ் சதம்

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் அரியலூா் மாவட்டம் முதலிடம் பிடித்தது. வேலூா் ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் வலியுறுத்தல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்க... மேலும் பார்க்க

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்: இயக்க செயல்முறை கையேடு வெளியீடு

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கான இயக்க செயல்முறை கையேடு தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி

திமுகவைவிட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின் உற்பத்தி நிறுவுத்திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரிப்பு

தமிழகத்தின் மின் உற்பத்தி நிறுவு திறன் 42,772 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து 19,000 மெகாவாட்டை தொட்டுள்ள நிலையில... மேலும் பார்க்க