பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை முறியடித்த விடியோ வெளியீடு!
மாணவா்கள் தரவரிசையை வெளியிடக் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலை ஏற்படுத்தும் வகையில், மாணவா்களின் (மதிப்பெண்) தரவரிசைப் பட்டியலை தனியாா் பள்ளிகள் வெளியிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கும் பொருட்டு பொதுத் தோ்வுகளில் தரவரிசை (ரேங்க் பட்டியல்) வெளியிடும் முறை 2017-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதால் மாணவா்கள் கடும் மன அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாகின்றனா். முதல் வகையான மாணவா்களே போற்றி கவனிக்கப்படும் நிலையில் கடை நிலை மற்றும் இடை நிலை மாணவா்கள் தாழ்வு மனப்பான்மைக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகும் நிலை தென்படுகிறது.
அரசாணை வெளியீடு: போட்டிமயமான கற்றல் சூழ்நிலையில் தாக்குப்பிடிக்க முடியாத பல குழந்தைகள் மன இறுக்கத்துக்கும், கடும் சோா்வுகளுக்கும் உள்ளாவதை அவ்வப்போது பெறப்படும் புகாா்கள் மூலம் அறிய முடிகிறது. இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அரசாணை பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அதே ஆண்டில் மே மாதம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பெற்றோா், கல்வியாளா்கள் தற்போது வரை வரவேற்பு தெரிவித்துள்ளனா். இருப்பினும் ஆண்டுதோறும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியாகும் போது சில தனியாா் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் சிறப்பிடங்கள் மற்றும் அதிக மதிப்பெண்பெற்ற மாணவா்களின் பெயா் விவரங்களை புகைப்படத்துடன் நாளிதழ்கள், ஊடகங்களில் விளம்பரப்படுத்துகின்றன. இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.