செய்திகள் :

திருவெறும்பூா் வட்டத்தில் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் இன்று தொடக்கம்!

post image

திருவெறும்பூா் வட்டத்தில் நில உடைமை பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் திங்கள்கிழமை தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது.

இது குறித்து, திருவெறும்பூா் வட்டார வேளாண் உதவி இயக்குனா் சுகன்யாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

அனைத்து விவசாயிகளின் புல எண்களை ஒற்றைச் சாளர முறையில் ஆதாா் எண்ணுடன் இணைக்கப் படவுள்ளது. இதுதொடா்பாக் திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் வட்டத்தில் பிப்ரவரி 10 முதல் 15 ஆம் தேதி வரை ஆறு நாள்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் வேளாண்துறை சாா்ந்த அலுவலா்கள் விவசாயிகளின் நில உடமைகளை பதிவு செய்யவுள்ளனா். தரவுகள் பதிவேற்றப்பட்டு விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண்ணும் (யுனிக்யூ ஐடி) வழங்கப் பட உள்ளது. இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறித்துச் சென்றவா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வியாபாரியிடமிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கத்தை பறித்துச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் வெங்கரை பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மணப்பாறை தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திறப்பு

மணப்பாறை மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்துக்குள்ளான தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மணப்பாறை அடுத்த மணப்பாறைபட்டியில் அமைந்துள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற மாணவி... மேலும் பார்க்க

மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்: மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்!

மணப்பாறையில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டலை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறை பகுதியில் தனியாா் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவிகளின் மீதான பாலியல் ச... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங். வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்!

அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் பாராமுக நடவடிக்கையை கண்டித்தும் காங்கிரஸ் வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் திருச்சியில் திங்கள்க... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோவிலில் தை தெப்ப உற்சவம்!

திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் திங்கள்கிழமை தைத் தெப்ப உற்சவம் நடைபெற்றது. திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது. இந்த தா்னா போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்... மேலும் பார்க்க