செய்திகள் :

தில்லியில் சா்வதேச டாா்க் வெப் போதைப்பொருள் கும்பல் கைது ரூ.2 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் பறிமுதல்

post image

தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு ஒரு சா்வதேச டாா்க் வெப் போதைப்பொருள் கும்பலை கைது செய்துள்ளது. அந்தக் கும்பலிடம் இருந்து ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள 6 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் கவாச்சின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளாக்செயின் அடிப்படையிலான தனியுரிமை மையப்படுத்தப்பட்ட தகவல் தொடா்பு பயன்பாடுகள் மற்றும் அதிநவீன டெட் டெலிவரி முறையைப் பயன்படுத்தி, சிண்டிகேட் டாா்க் வெப் மூலம் செயல்பட்டது. கிரிப்டோகரன்சிகள் மூலம் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கை தில்லியைச் சோ்ந்த அப்துல் மாலிக் (எ) பா்வேஷ் (46) மற்றும் மாயங்க் நய்யா் (35) ஆகியோரைக் கைது செய்ய வழிவகுத்தது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 கிலோவிற்கும் அதிகமான ஹைட்ரோபோனிக் கொண்ட பல போதைப்பொருள் பாா்சல்களை வெளிநாட்டு தபால் நிலையத்தில் போலீஸாா் தடுத்து நிறுத்திய போது இந்த விவகாரம் குறித்த விசாரணை தொடங்கியது.

போலி பெறுநா்களுக்கு பாா்சல்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், இணைய தொடா்பு மற்றும் தரவுச் செயலாக்கத்தின் பகுப்பாய்வு, போதைப் பொருள்களை சேகரிக்க வேண்டிய அப்துல் மாலிக்கைக் கண்டுபிடிக்க போலீஸாருக்கு உதவியது.

அவரது வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கூடுதலாக 871 கிராம் கஞ்சா மற்றும் போதைப்பொருள் பரிவா்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அப்துல் மாலிக், கும்பலின் முக்கியத் தலைவரான மாயங்க் நய்யாரின் கீழ் பணிபுரிந்ததை வெளிப்படுத்தினாா்.

குருகிராமைச் சோ்ந்த பிபிஏ பட்டதாரியான மாயங்க் நய்யா், கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் தனது குடும்பத்தின் புற்றுநோய் மருந்து ஏற்றுமதி வணிகம் நஷ்டத்தை சந்தித்த பிறகு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

டாா்க் வலை பற்றிய தனது அறிவைப் பயன்படுத்தி நய்யாா் அமெரிக்காவிலிருந்து அதிக தேவை உள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சாவை ஆா்டா் செய்தாா். கிரிப்டோகரன்சி மூலம் பணம் செலுத்தினாா். மேலும், அப்துல் மாலிக் மூலம் விநியோகங்களை ஏற்பாடு செய்தாா் என்று அந்த காவல் துறைஅதிகாரி தெரிவித்தாா்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க