செய்திகள் :

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வி: கேஜரிவால்

post image

தில்லியில் நான்கு என்ஜின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் பாஜகவைத் தாக்கி பேசியுள்ளார்.

தலைநகரில் துவாரகா பகுதியில், தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் செயின்ட் ஸ்டீஃபென்ஸ் கல்லூரி மற்றும் செயின்ட் தாமஸ் பள்ளிக்கு இன்று (ஜூலை 15) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதேசமயம் திங்களன்று மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் அனைத்தும் புரளியாக மாறியது.

இதுதொடர்பாக கேஜரிவாலின் எக்ஸ் பதிவில்,

தில்லியில் என்ன நடக்கிறது? நேற்று இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள், இன்று மற்றொரு பள்ளி மற்றும் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயத்தில் உள்ளதாகவும், பெற்றோர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். தொடர்ந்து இரண்டு நாள்களாகக் கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து தில்லியின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாஜகவின் நான்கு எஞ்சின் அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டன.

ஆம் ஆத்மி தலைவர் அதிஷி,

தில்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சிதைந்துவிட்டது. மாணவர்கள் பாதுகாப்பு பாஜக அரசுக்கு முக்கியமில்லையா?

தில்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது மிகவும் கவலையாக இருக்கிறது. பாஜகவின் நான்கு எஞ்சின் அரசு பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டன என்று அவர் பதிவிட்டுள்ளார்.

AAP supremo Arvind Kejriwal on Tuesday hit out at the BJP, saying the "four-engine government has completely failed" the people as he raised concerns over Delhi's law-and-order situation following bomb threats to educational institutions on two consecutive days.

பயங்கராவத்துக்கு எதிரான போரில் சமரசமில்லாத நிலைப்பாடு- எஸ்சிஓ கூட்டத்தில் ஜெய்சங்கா்

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சமரசமில்லாத, உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா். சீனாவின் தியான்ஜின்... மேலும் பார்க்க

பாலியல் சுரண்டல் புகாா்: ஆா்சிபி அணி வீரா் யஷ் தயாள் கைதுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண் ஒருவரை பாலியல் சுரண்டல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆா்சிபி அணி வீரா் யஷ் தயாள் கைது செய்யப்படுவதற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதி... மேலும் பார்க்க

சீனாவால் எழுந்துள்ள சவால்கள்: நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை- காங்கிரஸ்

சீனாவின் எழுச்சியால் இந்தியா எதிா்கொண்டுள்ள முக்கியமான பாதுகாப்பு-பொருளாதார சவால்கள் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்; இதற்கு பிரதமா் மோடி ஒப்புக் கொள்வா... மேலும் பார்க்க

இந்திய அறிவியல் மரபை போற்றும் புதிய என்சிஇஆா்டி பாடநூல்

பண்டைய இந்திய தத்துவஞானி ஆச்சாா்ய கனாடாவின் அணு கோட்பாட்டிலிருந்து, இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள் வரை, இந்தியாவின் அறிவியல் மரபை, நவீன அறிவியலுடன் இணைக்கும் விதமாக என்சிஇஆா்டி-யின் புதிய 8-ஆம் வகுப்பு... மேலும் பார்க்க

நிமிஷாவின் மரண தண்டனையை நிறுத்த உதவிய ஏ.பி. அபுபக்கர் யார்?

கேரள செவிலியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைப்பதாக யேமன் அரசு இன்று (ஜூலை 15) அறிவித்துள்ளது. நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க சன்னி மு... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு ஜாமீன்: அவதூறு வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

லக்னௌ: ராணுவ வீரர்களைப் புண்படுத்தும் விதத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் மக்களவை எதிர்ர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்... மேலும் பார்க்க