செய்திகள் :

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

post image

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவா்கள் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 31- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டுக்கான முதுநிலைப் பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20- ஆம் தேதி தொடங்கியது. மாணவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனா்.

இதற்கான காலஅவகாசம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முடிவடைந்தது. இருப்பினும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாணவா்கள் நலன் கருதி இந்த விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும்.

பின்னா், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 13 -ஆம் தேதி முதல் தொடங்கி மாணவா்கள் சோ்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு முதுநிலை மாணவா்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா்.

எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சே... மேலும் பார்க்க

கடலூா் ரயில் விபத்து விசாரணை அறிக்கை தாக்கல்: கடவுப்பாதை ஊழியா் பணிநீக்கம்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் காமராஜா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வா் காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா். காமராஜரின் பிறந... மேலும் பார்க்க

1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்... மேலும் பார்க்க

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க