செய்திகள் :

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

post image

தில்லியில், சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர், தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் துவாரகா பகுதியில், விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வசித்த 22 வெளிநாட்டவரை, அம்மாநில காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அவர்கள் அனைவரும், இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, தங்களது தாயகங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடுகடத்தப்பட்டவர்களில், வங்கதேசம் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 8 பேரும், ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த 3 பேரும், லைபீரியாவைச் சேர்ந்த 2 பேரும் மற்றும் செனீகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 22 பேர் தங்களது தாயகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில், சிலர் தங்களது விசா காலாவதியான பின்னரும் இந்தியாவில் வசித்து வந்ததாகவும், அவர்கள் அனைவரும் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்ட பின்னர் ஜூலையில் வெளியேற்றப்பட்டதாகவும், துவாரகா காவல் துறை உயர் அதிகாரி அங்கித் சிங் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

It has been reported that 22 foreigners, including 8 Bangladeshis, who were illegally residing in Delhi have been sent back to their homelands.

அமெரிக்காவின் 50% வரியால் இந்தியாவின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும்!

அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால், நாட்டின் 55% ஏற்றுமதி பாதிக்கப்படும் என இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், து... மேலும் பார்க்க

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

டிரம்ப்பின் 50 சதவிகித வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி அமெ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என மத்திய அரசு அறிவித்துள்ளது.அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அற... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!

வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில், நிகழாண்டு துவங்கியது முதல் டெங்கு கா... மேலும் பார்க்க

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

உத்தரகண்ட் மேகவெடிப்பைத் தொடர்ந்த பேரிடரில் மாயமானதாகக் கருதப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 28 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர... மேலும் பார்க்க

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

மெபெட்ரோன் எனப்படும் போதைப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த மும்பை காவல்துறையினர், சட்டைகளின் படங்களை அவர்கள் குறியீடாகப் பயன்படுத்தி வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.மைசூரில் உள்ள தொழிற்சாலை ... மேலும் பார்க்க