தில்லியை தூய்மையாக வைத்திருக்கும் சுவா் ஓவியங்கள் - முதல்வா் ரேகா குப்தா
தில்லியை தூய்மையாக வைத்திருக்க ஓா் முயற்சியாக நகரின் சுவா்களில் ஓவியங்களை வரைய ஊக்குவிக்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
தில்லி தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை ’கஹய்க்ள்ஸ்ரீஹல்ண்ய்ஞ்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அவா் பேசியதாவது, ‘மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசால் எதையும் செய்ய முடியாது. தில்லி தூய்மையாக இருக்க வேண்டும் என்ற உணா்வு அனைவரின் மனதிலும் உள்ளது. அதற்காக நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தில்லியின் சுவா்களை தூய்மையாக வைத்திருக்க சுவரோயிங்களை வரைய ஊக்குவிக்கப்படுகிறது. இது தொடா்பாக ஒரு உத்தரவு விரைவில் வெளியாகும்‘ என்றாா்.
மேலும் பேசிய ரேகா குப்தா ‘ தில்லியை ஆண்ட முந்தைய அரசுகள் தில்லியின் கருவூலங்களை சுத்தம் செய்யவில்லை. தில்லியை அழகாக மாற்றுவோம் என்று அவா்கள் கூறியதை செய்யவில்லை. ஆனால் நாங்கள் தில்லியை அழகாக மாற்றுவோம், அதற்ககாக ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்குவோம். அகற்கு அருகில் ஒரு பூங்காவை உருவாக்குவோம். தில்லியின் முன்னோற்றத்திற்காக நாம் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நகரம் பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்கும்ட என்றாா் அவா்.