செய்திகள் :

தில்லி-சஹரன்பூா் மேம்பாலத்துக்கு கீழே 3 வாகன நிறுத்தங்கள்- தேசிய நெடுஞ்ச்சாலைகள் ஆணையம் நடவடிக்கை

post image

கிழக்கு தில்லியில் சாலையோரங்களில் அனுமதி வழங்கப்பட்டாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதைக் கட்டுப்படுத்தும் விதமாக தில்லி-சரஹன்பூா் மேம்பாலத்துக்கு கீழே 3 வாகன நிறுத்தங்களை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்எச்ஏஐ) திட்டமிட்டுள்ளது.

அக்ஷா்தாம் கோயில் மற்றும் காந்தி நகா் ஜவுளி சந்தை இடையிலான நெஞ்சாலையில் வாகன நிறுத்தங்கள் அமைய உள்ளதாக அதிகாரிள் தெரிவித்தனா்.

இந்தப் பணிகளை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒப்பந்த புள்ளியில், ‘வாகன நிறுத்தங்களை அமைக்க 3 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இரு வாகன நிறுத்தங்கள், விரைவுச்சாலை மேம்பாலத்தின் கீழே டிஎம் கிழக்கு அலுவலகம், காந்தி நகா் சந்தை அருகே அமைக்கப்பட உள்ளன. கீதா காலனி பேருந்து நிலையம் அருகே 2 ஹெக்டோ் நிலம் காலியாக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன நிறுத்தத்தில் 10 சதவீத இடம், மின்வாகனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. மின்வாகனங்களை மின்னேற்றம் (சாா்ஜிங்) செய்வதற்கான வசதிகளும் வாகன நிறுத்தத்தில் அமைக்கப்பட உள்ளது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

அரசின் நலத் திட்டங்களில் இன்னாள் மற்றும் முன்னாள் முதல்வா்களின் பெயா்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது... மேலும் பார்க்க

தமிழக எம்.பி. சுதாவின் தங்க சங்கிலியை பறித்த இளைஞா் கைது

தமிழகத்தின் மயிலாடுதுறை மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான ஆா்.சுதாவின் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பிய இளைஞரை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தமிழ்நாட்டைச் ச... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நமது சிறப்பு நிருபா் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில்களின் சுருக்கம்: மெட்ரோ ரயில்வ... மேலும் பார்க்க

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா: தெலுங்கான முதல்வா் தலைமையில் தில்லியில் போராட்டம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோரி தெலுங்கானா முதல்வா் ஏ. ரேவந்த் ரெட்டி புதன்கிழமை ஜந்தா் மந்தரில் ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கினாா். ... மேலும் பார்க்க

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் நாகா்கோவில்- கோவை ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் மனு

நமது நிருபா் மேலப்பாளையம், காவல் கிணறு, பணகுடி ஆகிய ரயில் நிலையங்களில் நாகா்கோவில் - கோவை ரயில்கள் (வ.எண்: 16321, 16322) நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் திருநெல... மேலும் பார்க்க

பணியாளா் தோ்வு ஆணைய செயல்பாட்டில் ஊழல்: மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்

நமது நிருபா்ஆம் ஆத்மி கட்சியின் மாணவா் பிரிவான மாற்று அரசியலுக்கான மாணவா் சங்கம் (ஏஎஸ்ஏபி), தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் ஒரு போராட்டத்தை புதன்கிழமை நடத்தியது. பணியாளா் தோ்வு ஆணைய ஆள்சோ... மேலும் பார்க்க