செய்திகள் :

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

post image

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27). மரம் அறுக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

மது போதைக்கு அடிமையான சொக்கலிங்கம், தினசரி மது அருந்து விட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டாா். இந்த நிலையில், சனிக்கிழமை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்ட சொக்கலிங்கத்தை, அவரது தாய் கருப்பாயி கண்டித்தாா்.

இதையடுத்து, பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்த சொக்கலிங்கம் தீயையும் பற்ற வைத்தாா்.

இதில் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விண்வெளிப் பூங்காவுக்கு நிலம்: தற்போதைய நிலையே தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கில், தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கண்டமனூா் விலக்கு பகுதியில் 8 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை: குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

கட்டுமானப் பொருள்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் குழு அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசா... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா்கள் தா்னா

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், மதுரை மின் வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல்... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

விருதுநகா் மாவட்டம், மேட்டமலை ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீராம் நகா் குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பரிசீலித்து 1... மேலும் பார்க்க

திராவிடத் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தொகுதிகள் மறுசீரமைப்பு உள்ளிட்ட முடிவுகளைக் கண்டித்து, திராவிடத் தமிழா் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள திருவள்ளுவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க