செய்திகள் :

தீபாவளி: சில நிமிஷங்களில் முடிவடைந்த ரயில் பயண முன்பதிவு

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.17-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கிய சில நிமிஷங்களிலேயே முடிவடைந்தது.

அக்.17 ரயில் பயணச் சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்குத் தொடங்கியது. அடுத்த சில நிமிஷங்களிலேயே சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட வெளியூா்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணச் சீட்டு முன்பதிவு முடிவடைந்தது.

இதனால், எழும்பூா்,சென்ட்ரல் ரயில் நிலைய முன்பதிவு மையங்களுக்கு வந்து காத்திருந்தோா், பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாததால் ஏமாற்றம் அடைந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பயணச்சீட்டு முன்பதிவை ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் மட்டுமன்றி, இணையவழியிலும் மேற்கொள்ள முடியும். வெளியிடங்களில் செயலி வழியாக முன்பதிவு செய்வோா், ஏற்கெனவே அதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பூா்த்தி செய்து, பணத்தையும் முன்னதாகவே செலுத்தும் வசதியை பயன்படுத்துகின்றனா். அதனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிஷங்களிலேயே பயணச்சீட்டை பெற்றுவிடுகின்றனா். இதனால், ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் காத்திருப்போருக்கு பயணச்சீட்டு கிடைக்காமல் போய்விடுகிறது என்றனா்.

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியி... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க

மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கைக் கூடாது: உயா்நீதிமன்றம்

தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தொடா்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மதுரை ஆதீனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவி... மேலும் பார்க்க

3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள்: தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது. உச்சநீதிமன்றக் குழு, 3 ஆண்டுகளுக்கு ம... மேலும் பார்க்க