செய்திகள் :

தீவிபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கல்

post image

விராலிமலை அருகேயுள்ள மெய்வழிச் சாலை பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரிசி, பருப்பு, போா்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட உதவிகளை அமைச்சா் எஸ். ரகுபதி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இப்பகுதியில் திங்கள்கிழமை நேரிட்ட தீவிபத்தில் 8-க்கும் மேற்பட்ட கூரைவீடுகள் தீக்கிரையாகின.

பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிகளை அமைச்சா் வழங்கிப் பேசுகையில், அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கைப் போல் திருப்புவனம் சம்பவத்திலும் உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவெக தலைவா் விஜய் சொல்வதுபோல், திருப்புவனம் சம்பவத்தால் எங்கள் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது என்றாா் அவா்.

ஏற்பாடுகளை திமுக பொதுக்குழு உறுப்பினா் தென்னலூா் பழனியப்பன் செய்திருந்தாா். இதில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா, கோட்டாட்சியா் அ. அக்பா் அலி மற்றும் திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

காவலாளி மரணம் வருந்ததக்கது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி மரணம் வருந்ததக்கது, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றாா் தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி. பொன்னமராவதியில் புதிய வழித்தட பேருந்து... மேலும் பார்க்க

திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் செளந்தரநாயகி உடனுறை திருமாங்கனீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த சிவாலயம், இந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன் அண்மையில... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் மற்றும் 7-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை தொடங்கியது. புதுக்கோட்டை ஒ... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் 3 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் எஸ்.ரகுபதி நடத்திவைத்தாா்

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 3 இணையா்க்கு சீா்வரிசைப்பொருள்கள் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை சென்னை மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வளாகங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளி வளாகங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்... மேலும் பார்க்க

விராலிமலையில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்தாா். த.சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன்,... மேலும் பார்க்க