செய்திகள் :

தீவிரவாதம் ஒழியும்வரை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது: கம்பீர்

post image

இந்தியாவின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தீவிரவாதம் ஒழியும் வரை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது எனக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நெடுங்காலமாகவே எல்லைப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதனால் இந்தியா 2007 முதல் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கும் செல்வதில்லை.

ஐசிசி தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோதுகின்றன. மற்ற போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்திய முப்படைகள் ஒருங்கிணைந்து செவ்வாய் நள்ளிரவில் அதிரடித் தாக்குதல் நடத்தியது.

கௌதம் கம்பீர் இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது:

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் தீவிரவாதம் ஒழியும்வரை இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடக் கூடாது.

இரு நாட்டிற்கும் இடையேயான கிரிக்கெட், பாலிவுட் என எந்த விதமான உறவும் தேவையில்லை. ஏனெனில் இவையெல்லாம் இந்திய ராணுவ வீரர்கள், மக்களை விட முக்கியமானதில்லை என நான் இதற்கு முன்பாகவே சொல்லியிருக்கிறேன்.

இருப்பினும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவு செய்வது அரசாங்கம்தான்.

போட்டிகள் நடைபெறுவதும், திரைப்படங்கள் எடுப்பதும், பாடகர்கள் பாடுவதும் நமது குடும்பத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு சமனாகாது.

ஆசிய கோப்பை விளையாடுவது குறித்து நான் முடிவெடுக்க முடியாது. பிசிசிஐ, இந்திய அரசும் இதில் முடிவு எடுக்கும். அப்படியே விளையாட அனுமதித்தாலும் அதை நாங்கள் அரசியலாக்க மாட்டோம் என்றார்.

ஸ்மிருதி மந்தனா சதம்: இலங்கைக்கு 343 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஸ்ம... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இந்திய மகளிர் பேட்டிங்!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க

தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்; விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாதீர்கள் என விராட் கோலியிடம் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்ட... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்துமா இந்தியா?

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நாளை (மே 11) நடைபெறவுள்ளது.இந்திய மகளிரணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வர... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணைநிற்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணை நிற்பதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலை இந்தியா மேற்கொ... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாக். சூப்பர் லீக் ஒத்திவைப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நட... மேலும் பார்க்க