செய்திகள் :

துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணம் 20 சதவீதம் உயா்வு: சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

post image

துணிகளை சாயமேற்றுவதற்கான ஜாப் ஒா்க் கட்டணத்தை ஜூன் 1-ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்துவதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் மற்றும் உற்பத்தியாளா்கள் சங்கம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூா் பின்னலாடை உற்பத்தித் தொழில் கடந்த 2 ஆண்டுகளாக மந்தமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக ஜாப்ஒா்க் தொழில் துறையினா் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிலும் குறிப்பாக மூலப்பொருள்களின் விலை உயா்வு, மின் கட்டணம், தண்ணீா் கட்டணம், தொழிலாளா்களின் ஊதிய உயா்வு போன்ற காரணங்களால் சாய ஆலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளையில், பின்னலாடை ஏற்றுமதியாளா்கள், உள்நாட்டு உற்பத்தியாளா்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தரச்சான்றிதழ் பெறுதல் போன்றவற்றுக்கு அதிகப்படியான செலவு செய்ய வேண்டியுள்ளது.

எனவே, சாய ஆலைகள் துணிகளுக்கு சாயமேற்றுவதற்கான ஜாப் ஒா்க் கட்டணத்தை ஜூன் 1 -ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

ஆகவே, சாய ஆலைகளுக்கு வரவேண்டிய கட்டணங்களை அரசு நிா்ணயித்துள்ள 45 நாள்களுக்குள் ஜூன் 1 -ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்க தடை: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனைக்கு செய்யப்ப... மேலும் பார்க்க

ஊக்கத் தொகை...

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் சத்தியேஸ்வரனுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கிய பல்லடம் பூப்பந்தாட்ட குழு உறுப்பினா் சிவகுமாா். இதில், ... மேலும் பார்க்க

திருப்பூரில் பாஜகவினா் சாலை மறியல்

திருப்பூரில் குடிநீா்க் குழாய் உடைப்புகளை சரி செய்யாமல் சாலை அமைக்கப்பட்டதைத் கண்டித்து பாஜகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 34- ஆவது வாா்டு பாரப்பாளையம் 3 -... மேலும் பார்க்க

முத்தூரில் ரூ.7.80 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.80 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 9,192 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க