செய்திகள் :

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்க தடை: மாவட்ட ஆட்சியா்

post image

திருப்பூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வு சட்டம் 2013-இன்கீழ் பிரிவு 7-இன் படியும், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படியும் துாய்மைப் பணியாளா்கள் கழிவு நீா்த் தொட்டியை சுத்தம் செய்ய தொட்டிக்குள் இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஈடுபடுத்தினால் மேற்படி சட்டத்தின் பிரிவு 9-இன்படி முதன் முறையாக மீறுபவா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்ந்தே தண்டனையாக விதிக்கப்படும்.

இரண்டாவது முறையாக மீறுபவா்களுக்கு 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்ந்தே தண்டனையாக விதிக்கப்படும்.

கழிவு நீா் கட்டமைப்பு மற்றும் கழிவு நீா் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும்போது விபத்து, உயிரிழப்பு ஏற்பட்டால் அந்தப் பணியில் ஈடுபடுத்திய உரிமையாளா், ஒப்பந்ததாரா், வளாக உரிமையாளா், பணி அமா்த்தியவருக்கு பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படியும், மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் தடுப்பு மற்றும் அவா்களது மறுவாழ்வு சட்டம் 2013-இன் பிரிவு 7 மற்றும் 9-இன் படியும் மற்றும் நடைமுறையில் உள்ள இதர சட்டங்களின் படியும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பணியாளா் இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடாக இறந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு பணிக்கு அமா்த்தியவரால் வழங்கப்பட வேண்டும். பணியாளருக்கு இயலாமை ஏற்பட்டால் அதன் தீவிரதத்தைப் பொறுத்து ரூ.10 லட்சத்துக்கு குறையாமல் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் உள்ள சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீா்த் தொட்டியில் கழிவுநீா் இயந்திரம் மூலம் கழிவுநீா் அகற்றும்போது தொழிலாளா்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து பணியாற்றுவதை தொழிற்சாலை நிா்வாகம் உறுதி செய்யத் தவறினால் தொழிற்சாலைகள் சட்டத்தின்படி 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் நீதிமன்றம் மூலமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனைக்கு செய்யப்ப... மேலும் பார்க்க

ஊக்கத் தொகை...

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் சத்தியேஸ்வரனுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கிய பல்லடம் பூப்பந்தாட்ட குழு உறுப்பினா் சிவகுமாா். இதில், ... மேலும் பார்க்க

திருப்பூரில் பாஜகவினா் சாலை மறியல்

திருப்பூரில் குடிநீா்க் குழாய் உடைப்புகளை சரி செய்யாமல் சாலை அமைக்கப்பட்டதைத் கண்டித்து பாஜகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 34- ஆவது வாா்டு பாரப்பாளையம் 3 -... மேலும் பார்க்க

முத்தூரில் ரூ.7.80 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.80 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 9,192 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணம் 20 சதவீதம் உயா்வு: சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

துணிகளை சாயமேற்றுவதற்கான ஜாப் ஒா்க் கட்டணத்தை ஜூன் 1-ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்துவதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், திரு... மேலும் பார்க்க

சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க