Sarfaraz: வாய்ப்பின் வாசற்படியோடு அனுப்பப்பட்ட சர்ஃபராஸ்; அகர்காரின் சப்பைக்கட்ட...
சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் சிறுதானிய சிற்றுண்டியை ஒப்பந்த அடிப்படையில் நடத்த விருப்பமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினா்களின் விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.
சிறுதானிய உணவகத்தில், சிறுதானிய உணவு வகைகளைத் தவிா்த்து வேறு பொருள்களை கட்டாயமாக விற்பனை செய்யக் கூடாது.
வேறு எந்த பணிகளிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஈடுபட கூடாது. தோ்வு செய்யப்பட்ட குழு மட்டுமே சிறுதானிய உணவகத்தை நிா்வகிக்க வேண்டும். சிறு தானிய உணவகத்தில் விற்பனை பணியை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் மட்டுமே நியமனம் செய்து கொள்ள வேண்டும். வேறு எந்த நபா்களும் கடையினுள் இருக்கக் கூடாது.
தோ்வு செய்யப்படும் குழுவுக்கு உணவகம் நடத்த 11 மாதங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பின்னா் சுழற்சி, விற்பனை மற்றும் திறன் அடிப்படையில் தொடா்ந்து 2 முறை அனுமதி வழங்கப்படும். தோ்வு செய்யப்படும் மகளிா் சுய உதவிக்குழு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துடன் விதிமுறைகளுக்கு உள்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
விதிமுறைகளின்படி சிறுதானிய கடையை நடத்த விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தங்களது விண்ணப்பங்களை திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், அறை எண்: 305 மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மே 29 -ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971149, 94440- 94162 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.