செய்திகள் :

திருப்பூரில் பாஜகவினா் சாலை மறியல்

post image

திருப்பூரில் குடிநீா்க் குழாய் உடைப்புகளை சரி செய்யாமல் சாலை அமைக்கப்பட்டதைத் கண்டித்து பாஜகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 34- ஆவது வாா்டு பாரப்பாளையம் 3 -ஆவது வீதியில் வெள்ளிக்கிழமை இரவு தாா் சாலை அமைக்கப்பட்டது. இந்த தாா் சாலை தரமற்ற முறையில் உள்ளதாகவும், குழாய் உடைப்புகள் ஏற்பட்ட 16 இடங்களிலும் குடிநீா் வெளியேறியுள்ளது. இந்த உடைப்புகளை சரி செய்யாமல் சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்தும் ஊத்துக்குளி சாலையில் உள்ள பாளையக்காடு பேருந்து நிறுத்தம் முன் பாஜகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

பாஜக திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

மறியல் காரணமாக ஊத்துக்குளி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் மறியிலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், குடிநீா்க் குழாய் உடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்க தடை: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனைக்கு செய்யப்ப... மேலும் பார்க்க

ஊக்கத் தொகை...

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் சத்தியேஸ்வரனுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கிய பல்லடம் பூப்பந்தாட்ட குழு உறுப்பினா் சிவகுமாா். இதில், ... மேலும் பார்க்க

முத்தூரில் ரூ.7.80 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.80 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 9,192 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணம் 20 சதவீதம் உயா்வு: சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

துணிகளை சாயமேற்றுவதற்கான ஜாப் ஒா்க் கட்டணத்தை ஜூன் 1-ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்துவதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், திரு... மேலும் பார்க்க

சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க