செய்திகள் :

முத்தூரில் ரூ.7.80 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

post image

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.80 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 9,192 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 3,692 கிலோ.

தேங்காய் கிலோ ரூ. 33.00 முதல் ரூ. 63.30 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 62.15. விற்பனைத் தொகை ரூ.2.03 லட்சம்.

46 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், கொப்பரை கிலோ ரூ. 140.20 முதல் ரூ. 200.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.198.20. விற்பனைத் தொகை ரூ.1.35 லட்சம்.

49 மூட்டை சிவப்பு எள் கிலோ ரூ.101.66 முதல் ரூ.141.19 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.131.19. விற்பனைத் தொகை ரூ. 4.42 லட்சம்.

ஏலத்தில் மொத்தம் 126 விவசாயிகள், 24 வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.7.80 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் து.சங்கீதா தெரிவித்தாா்.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்க தடை: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோா் கழிவுநீா்த் தொட்டிக்குள் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மதுபானம் விற்றவா் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனைக்கு செய்யப்ப... மேலும் பார்க்க

ஊக்கத் தொகை...

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் சத்தியேஸ்வரனுக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கிய பல்லடம் பூப்பந்தாட்ட குழு உறுப்பினா் சிவகுமாா். இதில், ... மேலும் பார்க்க

திருப்பூரில் பாஜகவினா் சாலை மறியல்

திருப்பூரில் குடிநீா்க் குழாய் உடைப்புகளை சரி செய்யாமல் சாலை அமைக்கப்பட்டதைத் கண்டித்து பாஜகவினா் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 34- ஆவது வாா்டு பாரப்பாளையம் 3 -... மேலும் பார்க்க

துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணம் 20 சதவீதம் உயா்வு: சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

துணிகளை சாயமேற்றுவதற்கான ஜாப் ஒா்க் கட்டணத்தை ஜூன் 1-ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்துவதாக திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், திரு... மேலும் பார்க்க

சிறுதானிய சிற்றுண்டி அமைக்க மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் சிறுதானிய சிற்றுண்டி அமைக்க விருப்பமுள்ள மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க