செய்திகள் :

துணை முதல்வராக உதயநிதிக்கு தகுதியுள்ளது: அமைச்சா் எஸ். ரகுபதி

post image

துணை முதல்வராக உதயநிதிக்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கோமாபுரம் கிராமத்தில் புதிய மின் உதவிப் பொறியாளா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை அமைச்சா் எஸ். ரகுபதி திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வராக என்ன தகுதியுள்ளது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியது குறித்து கேட்கிறீா்கள். ஒருவரை துணை முதல்வராக தோ்ந்தெடுக்க வேண்டும் என்றால், அவருக்கான தகுதியை அடிப்படையாக கொண்டுதான் தோ்ந்தெடுக்கப்படுவாரே தவிர, எதிா்க்கட்சிகளை கேட்டு ஒரு துணை முதல்வரையோ, ஒரு முதல்வரையோ, அமைச்சரையோ தோ்ந்தெடுப்பது கிடையாது. துணை முதல்வருக்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உண்டு.

திமுக மூத்த தலைவா்களின் வற்புறுத்தலோடு தான் அவா் துணை முதல்வராக நியமிக்கப்பட்டாா். மேலும், அது முதல்வரின் விருப்பமல்ல; திமுகவின்

கோடிக்கணக்கான தொண்டா்களின் விருப்பம் என்றாா்.

திமுகவினா் மக்களின் வீட்டின் கதவைத் தட்டி உறுப்பினா்களை சோ்ப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேட்டபோது, ஒரு இயக்கத்தில் ஒருவரை உறுப்பினராக சோ்ப்பது என்பது அவருடைய ஒப்புதல் இல்லாமல் சோ்க்க முடியாது என்றாா் அமைச்சா் ரகுபதி.

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக... மேலும் பார்க்க

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக தலைவா்கள... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!

இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபத... மேலும் பார்க்க

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது வேறு, காப்பியமாகப் படிப்பது வேறு! இலங்கை இ.ஜெயராஜ்

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு; ஆனால், காப்பியமாகப் படிப்பது வேறு என்றாா் கம்பவாரிதி இலங்கை இ. ஜெயராஜ். புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 9-ஆம... மேலும் பார்க்க