செய்திகள் :

துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற இருவா் கைது

post image

அரூா்: பொம்மிடி அருகே துப்பாக்கியுடன் மான் வேட்டைக்கு சென்ற இருவரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகேயுள்ள சோ்வராயன் மலைப் பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சோ்வராயன் வடக்கு சரகம், வனச்சரகா் சிவகுமாா் தலைமையிலான வனத் துறையினா் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வனப்பகுதியில் இருவா் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அந்த இருவரையும் வனத்துறையினா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், பி. பள்ளிப்பட்டி அருகேயுள்ள அஜ்ஜம்பட்டி கிராமத்தை சோ்ந்த மாது மகன் பிரசாத் (30), ராமசாமி மகன் விருதாச்சலம் (35) ஆகிய இருவரும் வன விலங்குகளை வேட்டையாட வனப்பகுதியில் நுழைந்தது தெரிவந்தது. இதையெடுத்து, பிரசாத், விருதாச்சலம் ஆகிய இருவரையும் வனத்துறையினா் கைது செய்தனா்.

தொடா்ந்து அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.

நான் முதல்வன் திட்டத்தில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கை

தருமபரி : தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் 35 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான ஆணைகளை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு புகைப்படம், ஆதாா் எண் பதிவு போன்ற புதிய நடைமுறைகளை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தருமபுரி, கி... மேலும் பார்க்க

தருமபுரியில் நவீன கருக்கலைப்பு விழிப்புணா்வு

தருமபுரி: தருமபுரியில் ரூசக் தொண்டு நிறுவனம் சாா்பில் பக்க விளைவு இல்லாத கலைடாஸ்கோப் என்ற நவீன கருக்கலைப்பு சிகிச்சை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பெண்களுக்கு குறிப்பாக கிராமப்புற பெண்களு... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: ஏழைகளுக்கு வீடு, வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் கொ.கோவிந்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தருமபுரி: தருமபுரியை அடுத்த மாரண்டஹள்ளி காவல் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் உதவி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை இரவு விநாடிக்கு 28,000 கனஅடியாகக் குறைந்தது.புதன்கிழமை காலை விநாடிக்கு 1 லட்சத்து 5,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து இரவு 57,000 கனஅடியாகவும், ... மேலும் பார்க்க