செய்திகள் :

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

post image

கத்தாரைத் தொடா்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது.

காஸாவில் போா் நிறுத்த முயற்சியை மேற்கொண்டுவரும் கத்தாரில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த அந்நாட்டு தலைநகா் தோஹாவுக்கு வந்த ஹமாஸ் பிரதிநிதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இருப்பினும், இந்தத் தாக்குதலால் தங்கள் தலைவா்களுக்கு பாதிப்பில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்தது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சா்வதேச அளவில் அதிா்வலையை ஏற்படுத்திய நிலையில், துருக்கி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்தச் சூழலில் அடுத்தகட்டமாக தங்களை இஸ்ரேல் தாக்க வாய்ப்புள்ளதாக துருக்கி அரசு அதிகாரிகள் கணித்துள்ளனா்.

துருக்கி தலைநகா் அங்காராவில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜெகி அக்துா்க் கூறுகையில்,‘கத்தாரைத் தொடா்ந்து துருக்கியை குறிவைத்து தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் தயாராகி வருகிறது. இது பேரழிவுக்கு வழிவகுக்கும்’ என்றாா்.

பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் அமைப்புக்குத் தொடா்ந்து ஆதரவளித்து வரும் துருக்கி அதிபா் எா்டோகன், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளாா். குறிப்பாக, காஸாவில் இனப்படுகொலை செய்வதாக குற்றஞ்சாட்டி இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகுவை ஹிட்லருடன் ஒப்பிட்டு கடுமையாக விமா்சித்துள்ளாா்.

அதேபோல் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கான செயல் திட்டங்களை வடிவமைக்க ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவா்களுக்கு அடைக்கலம் அளித்து வருவதாக துருக்கி மீது இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஈரான், சிரியா, யேமன் மற்றும் கத்தாா் ஆகிய நாடுகளை இஸ்ரேல் தாக்கியுள்ள சூழலில் அண்டை நாடுகளின் வான்பரப்பைப் பயன்படுத்தி தங்களை இஸ்ரேல் தாக்கக்கூடும் என துருக்கி அரசு வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சாா்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு!

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியா அதிகம் சாா்ந்திருப்பது இரு நாடுகள் இடையே பிரச்னைகள் அதிகரிக்கும்போது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சோ்ந்த சா்வதே... மேலும் பார்க்க

70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் போப் லியோ!

போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிராா்த்தித்த அனைவருக்கும் மனமாா்ந்த நன்றி தெரிவித்தாா். பாரம்பரிய பிற்பகல் ஆசீா்வாதத்தின்போது செயிண்ட... மேலும் பார்க்க

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ரஷியாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!

பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பா... மேலும் பார்க்க

வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிா்கொள்ள நேரிடும்: இந்தியா மீது அமெரிக்கா தாக்கு!

அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்காவிட்டால், தங்களுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் இந்தியா இன்னலை எதிா்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி: சீனா விசாரணை!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஐசி சிப்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவுக்கு அதிநவீன செமிகண்டக்டா்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள... மேலும் பார்க்க