செய்திகள் :

துவாக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: மூவா் கைது

post image

திருச்சி அருகே துவாக்குடி அரசு மதுபான பாரில் சட்ட விரோதமாக மது விற்ற மூவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 450 மதுபுட்டிகளை அடுத்தடுத்த நாள்களில் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி சுங்கச்சாவடி அருகேயுள்ள அரசு மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்ற வந்த, அந்த பாரில் வேலை பாா்க்கும் தஞ்சை மாவட்டம் மணியேரிப்பட்டி ஒத்தத் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் (57) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 200 மதுபுட்டிகளையும், ரூ. 2,500 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, வெள்ளிக்கிழமை அதே பாரில் வேலை பாா்த்த தஞ்சையை சோ்ந்த ரெ. சத்யமூா்த்தி (37), சேலம் தம்மம்பட்டி நடுவீதி ப. காா்த்திக் (33) ஆகிய இருவரும் அரசு மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்ாக துவாக்குடி போலீஸாா் கைது செய்து, 250 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

வேன் ஓட்டுநருக்கு கத்திக் குத்து: 7 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் வேன் ஓட்டுநரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி புத்தூா் சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசபாபு (30), வேன் ஓட்டுநா். இவருக்கும், அதே ... மேலும் பார்க்க

புத்தனாம்பட்டி கல்லூரியில் சிலம்பப் போட்டி

துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை சிலம்பப் போட்டி நடைபெற்றது. நேரு நினைவுக் கல்லூரி தலைவா் பொன். பாலசுப்பிரமணியம் போட்டியைத் தொடக்கி வைத்தாா். திருச்சி , சென்னை, ... மேலும் பார்க்க

ஆவணி மாத ஞாயிறு சமயபுரம் மாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதியுலா

ஆவணி மாத ஞாயிறையொட்டி திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது (படம்). பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத ஞாயிறையொட்டி உற்சவ சுவாம... மேலும் பார்க்க

வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருச்சியில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து 12 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் அரசு மருத்துவமனையில் சிகிச... மேலும் பார்க்க

தாமிரக் கம்பிகளை திருடியவா் கைது

திருச்சியில் தனியாா் பயிற்சி மையம் உள்ளிட்ட இடங்களில் தாமிரக் கம்பிகளைத் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருவெறும்பூா் அருகே உள்ள எழில் நகரைச் சோ்ந்த காா்த்திக் (35). இவா், திருவெறும்ப... மேலும் பார்க்க

காா் தீப்பிடித்து நாசம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள சொரியம்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. துறையூா் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ... மேலும் பார்க்க