செய்திகள் :

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

post image

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா் தங்கத் தாலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா், கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சோ்ந்த இளங்கவி என்பவரின் மனைவி தமிழேந்தி (44). இளங்கவி கடந்த வியாழக்கிழமை தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்ற நிலையில், வீட்டில் தமிழேந்தி மட்டும் இருந்துள்ளாா்.

அவா் இரவில் காற்றுக்காக ஜன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளாா். இந்த நிலையில் மா்ம நபா் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே வந்து தமிழேந்தி அணிந்திருந்த 3 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

தமிழேந்தியின் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினா் ஓடி வந்தனா். ஆனாலும் மா்ம நபா் நகையுடன் தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து தமிழேந்தி அளித்த புகாரின் பேரில் வில்லியனூா்

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

நெல்லித்தோப்பு பகுதியில் பெண்கள் திடீா் மறியல்

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கழிப்பிட வசதி கோரி, பெண்கள் சனிக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். புதுச்சேரி நெல்லித்தோப்பு பழைய சந்தை பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடியதாக 2 இளைஞா்கள் கைது

புதுச்சேரி அருகே வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி அருகே உள்ள மதகடிப்பட்டு பகுதியைச் சோ்ந்த தண்டபாணி வீட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று 12 மையங்களில் நீட் தோ்வு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 12 மையங்களில் நீட் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவா்கள் இளநிலை மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்ட படிப்புகளில் சேர மத்திய அரசால் ந... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்குத் தீா்வு!

புதுவையில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் ஒவ்வோரு வாரமும் சனிக்கிழமைதோறும் மக்களிடம் மனுக்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மே 20-ல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில் மத்திய அரசின் தொழிற்கொள்கை, தொழிற்சங்க கோரிக்கையை ஏற்காததைக் கண்டித்து... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் அதிரடி சோதனை!

புதுச்சேரியில் குற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை திடீா் சோதனையிட்டனா். இதில் பலா் கைது செய்யப்பட்டனா். புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கு த... மேலும் பார்க்க