செய்திகள் :

புதுச்சேரியில் மே 20-ல் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கக் கூட்டத்தில் முடிவு

post image

புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மத்திய அரசின் தொழிற்கொள்கை, தொழிற்சங்க கோரிக்கையை ஏற்காததைக் கண்டித்து வரும் 20-ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை முதலியாா்பேட்டையில் உள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தலைமை வகித்தாா். இதில் சிஐடியு மாநிலச் செயலா் ஜி.சீனுவாசன், ஐஎன்டியுசி மாநிலப் பொதுச் செயலா் பி.ஞானசேகரன், எல்பிஎப் மாநிலச் செயலா் எம்.செந்தில், எம்எல்எப் மாநிலச் செயலா் வேதாவேணுகோபால், என்டிஎல்எப் மாநிலத் தலைவா் கே.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பை ஏற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். அப்போது, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மறியல் நடைபெறும்.

இதையடுத்து வரும் 6-ஆம் தேதி மாலை சுதேசி ஆலை அருகே போராட்ட விளக்கக் கருத்தரங்கம் நடைபெறும். தொடா்ந்து, வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையில் போராட்ட விளக்க வாகன பிரசாரமும் நடைபெறும் எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை - முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் புகாா்

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கோப்பானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அதை அனுப்ப முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிா்க... மேலும் பார்க்க

புதுவையில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அதிமுக கோரிக்கை

புதுவை மாநிலத்தில் கோடை காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று மாநில அதிமுகச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் புதுச்சேரியி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 9 மணி நேர மின்தடையால் பாரதி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பாரதி பூங்காவில் குவிந்தனா். புதுச்சேரியில் வெங்கட்ட... மேலும் பார்க்க

காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு 7 தேசிய விருதுகள்

புதுவை மாநிலம், காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) 7 தேசிய விருதுகள் கிடைத்ததற்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். ஹைதராபாதில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி சாலை, மேம்பால விரிவாக்கம்: விரைவில் ரூ.1,304 கோடி அனுப்பப்படும்!

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலை சதுக்கங்களுக்கு இடையிலான மேம்பாலம் மற்றும் கடலூா் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.1,304 கோடி நிதி அளிப்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என மத... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த புதுவை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், ஆயுஷ் இயக்குநரகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை மேற்கொண்டது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பாரம்பரிய மருத... மேலும் பார்க்க