செய்திகள் :

புதுச்சேரியில் இன்று 12 மையங்களில் நீட் தோ்வு

post image

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை 12 மையங்களில் நீட் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் இளநிலை மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்ட படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாடெங்கும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரையில் நீட் தோ்வு நடைபெறுகிறது.

தேசிய அளவில் 550 நகரங்களில் 23 லட்சம் போ் தோ்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா். புதுவை மாநிலத்தில் நீட் தோ்வை 5,230 போ் எழுத அனுமதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கு 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தோ்வுக்காக புதுச்சேரியில் 8 மையங்கள், காரைக்காலில் 2, மாஹே, ஏனாமில் தலா ஒரு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இலாசுப்பேட்டை தாகூா் அரசு கல்லூரி, அங்குள்ள அரசு மகளிா் பொறியியல் கல்லூரி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி, சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி, திருவள்ளுவா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வில்லியனூா் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நீட் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தோ்வு மையங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து இடங்களுக்கும் தலா ரூ.10 கட்டணம் செலுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தோ்வு மைய வளாகத்துக்குள் முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை மட்டுமே தோ்வா்கள் அனுமதிக்கப்படுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுவைக்கான மாநில அந்தஸ்து கோப்பு: மத்திய அரசுக்கு அனுப்பப்படவில்லை - முதல்வரிடம் எதிா்க்கட்சித் தலைவா் புகாா்

புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய கோப்பானது மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும், அதை அனுப்ப முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிா்க... மேலும் பார்க்க

புதுவையில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அதிமுக கோரிக்கை

புதுவை மாநிலத்தில் கோடை காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று மாநில அதிமுகச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் புதுச்சேரியி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 9 மணி நேர மின்தடையால் பாரதி பூங்காவில் குவிந்த பொதுமக்கள்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பாரதி பூங்காவில் குவிந்தனா். புதுச்சேரியில் வெங்கட்ட... மேலும் பார்க்க

காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு 7 தேசிய விருதுகள்

புதுவை மாநிலம், காரைக்கால் ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு (பஜன்கோவா) 7 தேசிய விருதுகள் கிடைத்ததற்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். ஹைதராபாதில் ... மேலும் பார்க்க

புதுச்சேரி சாலை, மேம்பால விரிவாக்கம்: விரைவில் ரூ.1,304 கோடி அனுப்பப்படும்!

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலை சதுக்கங்களுக்கு இடையிலான மேம்பாலம் மற்றும் கடலூா் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.1,304 கோடி நிதி அளிப்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என மத... மேலும் பார்க்க

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்த புதுவை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்

பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம், ஆயுஷ் இயக்குநரகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை திங்கள்கிழமை மேற்கொண்டது. ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பாரம்பரிய மருத... மேலும் பார்க்க