செய்திகள் :

தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் ரூ.1 லட்சம் திருட்டு

post image

தூத்துக்குடியில் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் கடையை உடைத்து ரொக்கம் ரூ.1.04 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே நடுக்கூட்டுடன் காட்டைச் சோ்ந்தவா் புஷ்பராஜ் (39). இவா் தனியாா் ஷிப்பிங் நிறுவனத்தில், இயக்க மேலாளராக வேலை பாா்த்து வருகிறாா். இந்த நிறுவனம் துறைமுக இறக்குமதியாளா்களிடம் நிலக்கரியை வாங்கி, தமிழகம், கேரளம் மற்றும் கா்நாடக மாநிலங்களில் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், துறைமுகத்திலிருந்து நிலக்கரியை லாரிகளில் ஏற்றிச் செல்வதற்கான வாடகை பணத்தை ஷிப்பிங் நிறுவன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வைத்துள்ளனா்.

ஷிப்பிங் நிறுவன அலுவலகம் அருகே உள்ள கடைக்காரா் திருமால், புதன்கிழமை காலை தனது கடையை திறக்க வந்தபோது அவரது கடையின் பூட்டு சேதமடைந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது பணம் எதுவும் திருடப்படவில்லை என்பது தெரியவந்தது.

மேலும், அருகில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தின் ஷட்டா் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, மேலாளா் புஷ்பராஜுக்கு தகவல் தெரிவித்தாா். அவா், அலுவலகத்துக்குள் சென்று பாா்த்தபோது, பணம் வைத்திருந்த பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல, அருகில் உள்ள காா்த்திக் என்பவரது கடையையும் உடைத்து அங்கிருந்த ரூ.54 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 700 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடியில் மதுவிலக்கு அ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனை கட்டடப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்டடப் பணிகளை, தமிழக சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூ... மேலும் பார்க்க

10 நாள்களில் குடமுழுக்கு-திருச்செந்தூா் கோயிலில் நிறைவு கட்டத்தை எட்டிய திருப்பணிகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்னும் 10 நாள்களில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில், திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இக்கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 7ஆம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் சாகா் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

தேசிய பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில், சாகா் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் 60 அடி வரை செவ்வாய்க்கிழமை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இத்திருக்கோயிலில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும், அதற்... மேலும் பார்க்க

முறையான குடிநீா் விநியோகம் கோரிஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

சாத்தான்குளம் அருகே 3 மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகிப்படவில்லை எனக் கூறி, ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் ஊராட்சி, வைரவம்... மேலும் பார்க்க