தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: முதியவா் கைது
தூத்துக்குடியில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தா் நகரைச் சோ்ந்த தம்பதி நிஷாந்த் - சிந்துஜா. இவா்களுக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த கந்தசாமி (91) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
கந்தசாமி வீட்டு வாழைமரம் சுற்றுச்சுவரைத் தாண்டி, நிஷாந்த்தின் வீட்டுப் பகுதிக்குள் இடையூறாக இருந்ததாம். அதை நிஷாந்த் அகற்றினாராம். இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி, கடந்த வெள்ளிக்கிழமை (மே 23) வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த சிந்துஜாவை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கந்தசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.