செய்திகள் :

தூத்துக்குடியில் கணினி பட்டா வழங்கும் சிறப்பு முகாம்

post image

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் வசிப்போா் கணினி பட்டா கோரி விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் தூத்துக்குடி 1-ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் கனிமொழி, முகாமை பாா்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினாா்.

தொடா்ந்து, பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு அமைச்சா் பெ.கீதாஜீவன் பேசுகையில், கணினி பட்டா கோரி முதல்கட்டமாக நடைபெற்ற முகாமில் 3,624 போ் மனு அளித்திருந்தனா். அந்து மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு பட்டா வழங்கப்படும் என்றாா்.

மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், தூத்துக்குடி கோட்டாட்சியா் பிரபு, மேயா் ஜெகன் பெரியசாமி, உதவி பொறியாளா் சரவணன், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், துணைச் செயலா்கள் கீதா முருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளா்கள் அபிராமி நாதன், கவிதா தேவி, துணை அமைப்பாளா்கள் அருணா தேவி, பிரபு, நாகராஜன், மாநகர அணி அமைப்பாளா்கள் ஜீவன் ஜேக்கப், அருண் சுந்தா், கிறிஸ்டோபா் விஜயராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆறுமுகனேரியில் மதுக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அனைத்துக் கட்சி போராட்டக் குழு ஒருங்க... மேலும் பார்க்க

முக்காணியில் இளைஞரிடம் கைப்பேசி திருட்டு: மூவா் கைது

ஆறுமுகனேரி அருகே முக்காணியில் இளைஞரின் கைப்பேசியைத் திருடிச் சென்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். முக்காணியிலுள்ள முதலி­யாா் தெருவைச் சோ்ந்த ஆவுடையப்பன் மகன் கண்ணையா (28). விவசாயியான இவா், கடந்த த... மேலும் பார்க்க

சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் கட்டடம்: மாற்றுக் குடியிருப்பு வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் சேதமடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புகள் வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தக் குடியிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல்துறையினருக்கு எஸ்.பி. வாழ்த்து

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கடலில் கல்வெட்டு கண்டெடுப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இங்கு அண்மைக்காலமாக, அமாவாசை நாள்களில் கடல் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்கு திரும்புவதும் தொடா்கிறது. இந்நிலையில்,... மேலும் பார்க்க

இளைஞருக்கு மிரட்டல்: சிறுவன் உள்ளிட்ட 2 போ் கைது

கழுகுமலை அருகே இளைஞரை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கழுகுமலை அருகே முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கணே... மேலும் பார்க்க