தூத்துக்குடியில் செப்.27, 28-இல் ஓட்டம், மிதிவண்டிப் போட்டிகள்
தூத்துக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, ஓட்டப் பந்தயம், மிதிவண்டிப் போட்டி ஆகியவை நடைபெறவுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மிதிவண்டிப் போட்டி சனிக்கிழமை (செப். 27) மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ., தொலைவு இலக்காக வைத்து போட்டி நடைபெறும்.
நெடுந்தூர ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெற உள்ளது.
ஓட்டப் போட்டிகள் 17-25 பிரிவு ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ. இலக்காக வைத்து நடைபெற உள்ளன.
மிதிவண்டிப் போட்டியில் கலந்து கொள்பவா்கள் சாதாரண மிதிவண்டிகளை கொண்டு வருதல் வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்கள் பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று, போட்டி நாளன்று காலை 6 மணிக்கு முன் மாவட்ட விளையாட்டரங்கத்துக்கு வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.