செய்திகள் :

தூத்துக்குடி: அகற்றப்படாத ஆக்கிரமிப்பால் விபத்து; பைக் மீது லாரி மோதியதில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்தவர் பரமசிவம்‌. இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவரது வீட்டிற்கு மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உள்ள அவரது உறவினரான ஜெயபாண்டி என்பவரின் மனைவி வெண்ணிலா, அவரது மகள்கள் ஏஞ்சல் ஆராதியா, ஆசினியா ஆகியோர் கடந்த 22-ம் தேதி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை மீண்டும் டி.கல்லுப்பட்டியிலுள்ள அவர்களது வீட்டில் விடுவதற்காக வழக்கறிஞர் பரமசிவம், மூன்று பேரையும் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

பைம் மீது மோதிய டேங்கர் லாரி
பைம் மீது மோதிய டேங்கர் லாரி

கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி பைக் மீது மோதியது. இதில் 9 வயதான சிறுமி ஏஞ்சல் ஆராதியா டேங்கர் லாரிக்குள் விழுந்து விட்டார்.

லாரியின் டயர் ஏறி சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பரமசிவம், வெண்ணிலா, அவரது இளைய மகள் ஆசினியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்து தொடர்பாக டேங்கர் லாரியின் டிரைவர் சிவந்திபட்டியைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் உடலை மீட்ட போலீஸார்

இந்த விபத்து குறித்து சமூக ஆர்வலர்கள் பேசும்போது, ”பசுவந்தனை சாலை பகுதியில் சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இருப்பது மட்டுமின்றி, சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

ஆக்கிரமிப்புகளால் போதிய இடைவெளி இல்லாததால்தான் பைக் மீது டேங்கர் லாரி மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது” என்கிறார்கள்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க