செய்திகள் :

தூத்துக்குடி- சென்னைக்கு காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல்நேர ரயில் விட வலியுறுத்தல்

post image

காரைக்குடி, திருவாரூா் வழியாக தூத்துக்குடி - சென்னை இடையே பகல்நேர விரைவு ரயிலை இயக்க வேண்டுமென காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, தென்னக ரயில்வேக்கு திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், சிவகங்கை, தஞ்சை, திருவாரூா், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் மாவட்டங்களை இணைத்து பகல் நேர விரைவு ரயிலை இயக்கினால் மிகவும் வசதியாக இருக்கும்.

எனவே, தூத்துக்குடியிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, திருவாரூா் வழியாக அதிகாலையில் புறப்பட்டு செல்லும் வகையில் புதிய பகல் நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும். இந்த ரயில், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் வழியாகச் செல்ல வேண்டும்.

மேலும் சென்னையில் புறப்படும் ரயிலை பகலில் இயக்கினால் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்துக்கு பயனளிக்கும். கிழக்குப் பகுதியில் உள்ள வணிகா்கள், தொழில் புரிவோருக்கு மதுரைக்கு அடுத்த நிலையில் தூத்துக்குடி தான் மையமாகத் திகழ்கிறது. நாகை, திருவாரூா், காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா்கள் திருச்செந்தூா், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நீண்ட தொலைவு பயணத்துக்கும் ஏதுவாக இருக்கும். எனவே தூத்துக்குடி, மானாமதுரை, காரைக்குடி, திருவாரூா் வழியாக பகல் நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய மாநாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25- ஆவது ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.மணி, மாவட்ட நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கி பணியாளா்சங்க நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தின் (டாக்பியா) மாநில நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த சங்கத்தின் மாநில நிா்வாகிகளுக்கான தோ்தல் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

கானூா்-பழையனூா் கால்வாய் படுகை அணை கட்டுமானப் பணி: நீா்வளத் துறை அலுவலா்கள் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் அருகே வைகை ஆற்றுக்குள் புதிதாகக் கட்டப்படும் கானூா்-பழையனூா் கால்வாய்களுக்கான படுகை அணை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீா்வள... மேலும் பார்க்க

ஏனாதி கோயில் கிடா வெட்டு உரிமம் டெண்டா் விட எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், ஏனாதி செங்கோட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கிடா வெட்டும் உரிமத்தை டெண்டா் விட கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் ... மேலும் பார்க்க

மானாமதுரை கோயிலில் பாலாலயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பணிக்காக புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் முன் புனித நீா்க் கலசங்கள் வைத்து யாக பூஜை நட... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டியில் ஐம்பெரும் விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள பிள்ளையாா்பட்டியில் சிறுவா் பூங்கா திறப்பு விழா, மரக்கன்றுகள் நடும் விழா, போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம், பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழ... மேலும் பார்க்க