17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம்; வான்கடேவில் அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை...
தூத்துக்குடி: பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடன்; ஜப்தி செய்யப்பட்ட வீடு; விஷம் குடித்த தம்பதிகள்
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன். இவரது மனைவி பத்ரகாளி. லாரி டிரைவரான சங்கரன், தனக்குச் சொந்தமான வீட்டை அடகு வைத்து, தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.5 லட்சம் கடன் பெற்றிருந்தார். இந்த கடனுக்காக மாதந்தோறும் தவணையாக ரூ.11 ஆயிரம் கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகத் தவணைத் தொகையைச் செலுத்தாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பைனான்ஸ் நிறுவனத்தினர் பணத்தைச் செலுத்தும்படி நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என பைனான்ஸ் நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தவணைத் தொகை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுகிர் முன்னிலையில் முறப்பநாடு காவல் நிலைய போலீஸார்வ் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், வழக்கறிஞர்கள் சங்கரனின் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். ஜப்தி செய்ய வந்தவர்கள் சங்கரன் மற்றும் அவரது மனைவி பத்ரகாளியையும் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். அப்போது வீட்டிலிருந்த பூச்சி மருந்தை எடுத்து வெளியே வந்துள்ளார் பத்ரகாளி. அவர்கள் வெளியே வந்ததும் ஊழியர்கள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து வைத்தனர்.
இதற்கிடையில் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தைப் பத்ரகாளி குடித்தார். அப்போது போலீஸார் பூச்சி மருந்து பாட்டிலை கீழே தட்டி விட்டனர். கீழே விழுந்து கிடந்த பூச்சி மருந்தை எடுத்து சங்கரன் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சங்கரன் மயங்கி விழுந்துள்ளார். வாயில் நுரை தள்ளிய நிலையில் சங்கரன் தவித்தபோது, அவர் நடிப்பதாக போலீஸார் கூறியுள்ளனர். விஷம் குடித்த இருவரும் சுமார் 45 நிமிடம் அங்கே தவித்துள்ளனர். இருப்பினும், போலீஸார் முன்னிலையில் வீட்டுக்குச் சீல் வைக்கப்பட்டது. சங்கரன் வீட்டில் வளர்த்த மூன்று நாய்களும் வீட்டை விட்டு வெளியே வர மறுத்தது. உடனே அங்கிருந்த பணியாளர்கள் 3 நாய்களையும் உள்ளே வைத்து அடைத்து வீட்டைச் சீல் வைத்து விட்டுச் சென்றனர்.
மூன்று நாய்களும் உணவருந்த முடியாமல் வீட்டிற்குள் குரைத்துக் கொண்டிருந்தன. இதற்கிடையே, விஷம் குடித்த இருவரின் நிலை மோசமானதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சங்கரன் உயிரிழந்தார். பத்திரகாளிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தம்பதிக்கு 12-ம் வகுப்பு படிக்கும் பானு என்ற மகளும், 10-ம் வகுப்பு படிக்கும் கல்யாணி என்ற மகனும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb